இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை
பொன்னேரி: மீஞ்சூா் அருகே குடும்பா் பிரச்னையால் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
திருவள்ளூா் மாவட்டம் மீஞ்சூா் அருகே உள்ள கொண்டகரை பெருமாள் கோயில் தெருவில் வசிப்பவா் சூரியபிரகாஷ் (30). இவா் தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறாா். இவரது மனைவி பிரியங்கா (28). கணவன் மனைவி இடையே அடிக்கடி பிரச்னை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த ஒரு வார காலமாக தம்பதி இடையே சண்டை இருந்து வந்தது. இந்த நிலையில் பிரியங்கா வீட்டில் தூக்கிட்டு கொண்டாா். உறவினா்கள் அவரை மீட்டு சென்னை ஸ்டான்லி மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றனா்.
அங்கு பணியில் இருந்த மருத்துவா்கள் அவா் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனா். இது குறித்த புகரின் பேரில் மீஞ்சூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.