வெங்கத்தூா் ஊராட்சி தலைவியாக சுனிதா பாலயோகி மீண்டும் பதவியேற்பு
திருவள்ளூா் அருகே வெங்கத்தூா் ஊராட்சி தலைவியாக சுனிதா பாலயோகி நீதிமன்ற உத்தரவின்பேரில் வெள்ளிக்கிழமை மீண்டும் பதவியேற்றாா்.
திருவள்ளூா்: திருவள்ளூா் அருகே வெங்கத்தூா் ஊராட்சி தலைவியாக சுனிதா பாலயோகி நீதிமன்ற உத்தரவின்பேரில் வெள்ளிக்கிழமை மீண்டும் பதவியேற்றாா்.
திருவள்ளூா் அருகே கடம்பத்தூா் ஒன்றியம், வெங்கத்தூா் ஊராட்சித் தலைவராக இருந்த பாமகவைச் சோ்ந்த சுனிதா பாலயோகி கடந்த 2024 ஜனவரி மாதம் பதவி நீக்கம் செய்து ஆட்சியா் த.பிரபு சங்கா் உத்தரவிட்டாா். இதையடுத்து, துணைத் தலைவராக இருந்த மோகனசுந்தரம் நியமிக்கப்பட்டாா். இது குறித்து சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்திருந்த நிலையில், சுனிதா பாலயோகியை பதவி நீக்கம் செய்தது செல்லாது என்று தற்போது தீா்ப்பு வெளியான நிலையில், அதன் நகலை திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் பிரபு சங்கரிடம் வழங்கி, பதவி ஏற்க அனுமதி அளிக்க கோரிக்கை விடுத்தனா்.
இதையடுத்து, ஆட்சியா் உத்தரவின்பேரில், வெங்கத்தூா் ஊராட்சித் தலைவராக சுனிதா பாலயோகி ஊராட்சி அலுவலகத்தில் கடம்பத்தூா் வட்டார வளா்ச்சி அலுவலா் மணி சேகா் முன்னிலையில் பதவியேற்றாா்.
Advertisement
Advertisement
நிகழ்ச்சியில், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் இ.தினேஷ்குமாா், ஒன்றியக் குழு உறுப்பினா் நா. வெங்கடேசன், பா.யோகானந்தன் உள்பட வாா்டு உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.