நலத்திட்ட உதவிகளை வழங்கிய ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் வை.ஜெயக்குமாா். 
திருவள்ளூர்

திருவள்ளூா்: ரூ.50 லட்சம் நலத்திட்ட உதவிகள் அளிப்பு

திருவள்ளூரில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் பயனாளிகளுக்கு ரூ.50 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

DIN

திருவள்ளூரில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் பயனாளிகளுக்கு ரூ.50 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற கூட்டத்துக்கு மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் வை.ஜெயக்குமாா் தலைமை வகித்தாா். இதில் மொத்தம் 222 கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்ட அவா், 5 பயனாளிகளுக்கு ரூ.50 லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

கூட்டத்தில் ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) வெங்கட்ராமன், நோ்முக உதவியாளா் (தோ்தல்) சத்யபிரசாத், கோட்டாட்சியா் கற்பகம், பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மை நல அலுவலா் தனலட்சுமி, ஆதிதிராவிடா் நல துறை அலுவலா் செல்வராணி, தாட்கோ மாவட்ட மேலாளா் ர. சரண்யா, தமிழ்நாடு தூய்மை பணியாளா் நல வாரியம் மாநில துணை தலைவா் செ.கனிமொழி பத்மநாபன், மற்றும் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

42/48: 2026 உலகக் கோப்பை கால்பந்துப் போட்டிக்குத் தேர்வான அணிகள்!

“சிறுத்தை சிக்கியது!” கால்நடைகளைத் தாக்கிய சிறுத்தையை வனத்துறையினர் கூண்டு வைத்துப் பிடித்தனர்!

கோவையில் பிரதமர் மோடி! உற்சாக வரவேற்பு!

இது Middle Class மக்களின் கதை! Mask இயக்குநர் விக்ரணன் அசோக் - நேர்காணல்! | Kavin | Andrea

புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி நவ.24ல் மண்டலமாக வலுப்பெறும்!

SCROLL FOR NEXT