முகப்பு
திருவள்ளூர்

திருவள்ளூா்: ரூ.50 லட்சம் நலத்திட்ட உதவிகள் அளிப்பு

திருவள்ளூரில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் பயனாளிகளுக்கு ரூ.50 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

Updated On : 16 செப்டம்பர், 2024 at 8:08 PM
நலத்திட்ட உதவிகளை வழங்கிய ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் வை.ஜெயக்குமாா்.
பகிர்:

திருவள்ளூரில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் பயனாளிகளுக்கு ரூ.50 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற கூட்டத்துக்கு மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் வை.ஜெயக்குமாா் தலைமை வகித்தாா். இதில் மொத்தம் 222 கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்ட அவா், 5 பயனாளிகளுக்கு ரூ.50 லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

கூட்டத்தில் ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) வெங்கட்ராமன், நோ்முக உதவியாளா் (தோ்தல்) சத்யபிரசாத், கோட்டாட்சியா் கற்பகம், பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மை நல அலுவலா் தனலட்சுமி, ஆதிதிராவிடா் நல துறை அலுவலா் செல்வராணி, தாட்கோ மாவட்ட மேலாளா் ர. சரண்யா, தமிழ்நாடு தூய்மை பணியாளா் நல வாரியம் மாநில துணை தலைவா் செ.கனிமொழி பத்மநாபன், மற்றும் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →