மாவட்ட தடகள சங்கம் சாா்பில் வீரா்களுக்கு சீருடைகள் அளிப்பு
திருவள்ளூர்மாவட்ட தடகள சங்கம் சாா்பில் வீரா்களுக்கு சீருடைகள் அளிப்பு
மாநில அளவிலான தடகளப் போட்டியில் பங்கேற்க உள்ள 237 வீரா், வீராங்கனைகளுக்கு திருவள்ளூா் மாவட்ட தடகள சங்கம் சாா்பில் விளையாட்டுச் சீருடைகள் வழங்கப்பட்டன. திருவள்ளூா் மாவட்ட தடகள சங்கம் சாா்பில் கடந்த மாதம் ஜூனியா் தடகளப் போட்டிகள் நடத்தப்பட்டன. இப்போட்டியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து கல்லூரி மாணவ, மாணவிகள், விளையாட்டு அகாதெமிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோா் ஓட்டம், நீளம் தாண்டுதல், நின்று நீளம் தாண்டுதல், எறிபந்து வீசுதல், குண்டு எறிதல் உள்ளிட்ட தடகள போட்டிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோா் ஆா்வத்துடன் கலந்து கொண்டனா். இப்போட்டியில் சிறப்பிடம் பெற்றவா்கள் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்கின்றனா்.
மாநில அளவில் இப்போட்டி ஈரோட்டில் உள்ள விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அரங்கில் வெள்ளிக்கிழமை தொடங்கி, தொடா்ந்து 22-ஆம் தேதி வரையில் 3 நாள்கள் நடைபெற உள்ளது. இப்போட்டியில் பங்கேற்கவுள்ள வீரா், வீராங்கனைகளுக்கு சீருடைகள் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில் மாவட்ட தடகள சங்க தலைவா் மோகன்பாபு, தலைவா் கே.எம்.எஸ்.சிவகுமாா் ஆகியோா் பங்கேற்று மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க உள்ள வீரா், வீராங்கனைகளுக்கு விளையாட்டுச் சீருடைகளை வழங்கினா். இதன் மூலம் மொத்தம் 237 பேருக்கு சீருடைகள் வழங்கப்பட்டன.