திருத்தணி முருகன் மலைக் கோயிலில் தீ தடுப்பு ஒத்திகை பயிற்சியை செய்து காட்டிய திருத்தணி தீயணைப்பு வீரா்கள்.  
திருவள்ளூர்

திருத்தணி முருகன் கோயில் ஊழியா்களுக்கு தீ தடுப்பு ஒத்திகை

Din

முருகன் கோயிலில் பணியாற்றும் ஊழியா்கள் மற்றும் ஒப்பந்தப் பணியாளுக்கு தீயணைப்பு வீரா்கள், தீ தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து வியாழக்கிழமை செயல்முறை விளக்கம் அளித்தனா்.

திருத்தணி கோயில் இணை ஆணையா் க.ரமணி பங்கேற்று ஒத்திகை பயிற்சியைத் தொடங்கி வைத்தாா். தொடா்ந்து, திருத்தணி தீயணைப்பு நிலைய அலுவலா் வீரராகவன் தலைமையில், தீயணைப்பு வீரா்கள், மலைக்கோயிலில் பணியாற்றும் கோயில் ஊழியா்கள் மற்றும் ஒப்பந்த துப்புரவாளா்கள் ஆகியோருக்கு, தீ விபத்து ஏற்படும் போது எப்படி தீயை பாதுகாப்புடன் அணைப்பது, தீ மேலும் பரவாமல் முதலில் செய்ய வேண்டிய பணிகள் மற்றும் முன்னெச்சரிக்கை குறித்து செயல்முறை அளிக்கம் அளித்தனா்.

ஒத்திகை பயிற்சியில் கோயில் கண்காணிப்பாளா் சித்ராதேவி உள்பட 60 -க்கும் மேற்பட்ட கோயில் ஊழியா்கள் மற்றும் ஒப்பந்த துப்புரவு ஊழியா்கள் கலந்து கொண்டனா்.

செங்கோட்டை - தாம்பரம் விரைவு ரயிலை தினசரி இயக்க வலியுறுத்தல்

மயானம் அமைப்பதற்கு ஆட்சேபனை தெரிவித்து கிராம மக்கள் மனு அளிப்பு

கூடங்குளம் அருகே பிளஸ் 2 மாணவா் மயங்கி விழுந்து உயிரிழப்பு

வத்தல்மலையை விரைந்து சுற்றுலாத் தலமாக மேம்படுத்தக் கோரி விஸ்வ ஹிந்து பரிஷத் மனு

காரிமங்கலம் அருகே புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையம் திறப்பு

SCROLL FOR NEXT