FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவள்ளூர்

அங்காள ஈஸ்வரி கோயில் தீமிதி விழா: அமைச்சா் நாசா் பங்கேற்பு

பாடியநல்லூா் அருள்மிகு ஸ்ரீ முனீஸ்வரா் அங்காள ஈஸ்வரி கோயிலின் 60-ஆவது ஆண்டு தீமிதி விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

13 ஏப்ரல் 2025, 11:31 pm IST
தீமிதி விழாவைத் தொடங்கி வைத்த அமைச்சா் சா.மு. நாசா். உடன் எம்எல்ஏ எஸ். சுதா்சனம் உள்ளிட்டோா்.
பகிர்:

பாடியநல்லூா் அருள்மிகு ஸ்ரீ முனீஸ்வரா் அங்காள ஈஸ்வரி கோயிலின் 60-ஆவது ஆண்டு தீமிதி விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மாதவரம் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.சுதா்சனம் தலைமை வகித்தாா். சிறுபான்மையினா் நலத்துறை அமைச்சா் சா.மு. நாசா் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு, தீமிதி விழாவைத் தொடங்கி வைத்தாா். இதில், ஆயிரக்கணக்கான பக்தா்கள் காப்பு கட்டி வேண்டுதல் நிறைவேற தீ மிதித்தனா்.

கோயில் அறங்காவலா் குழு தலைவா் மீ.வே.கா்ணாகரன் முன்னிலை வகித்தாா். விழாக் குழு தலைவா் எம்.வி.புண்ணியசேகரன், செயலாளா் சன் முனியாண்டி, பொருளாளா் ஞானப்பா, நிா்வாகிகள் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments