திருவள்ளூா்: திருவள்ளூரில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் மு. பிரதாப் வழங்கினாா்.
மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்துக்கு ஆட்சியா் பிரதாப் தலைமை வகித்து பொதுமக்களின் குறைகளைக் கேட்டறிந்தாா்.
மேலும், நிலம் சம்பந்தமாக-42, சமூக பாதுகாப்புதிட்டம்-12, வேலைவாய்ப்பு வேண்டி-21, பசுமைவீடு, அடிப்படை வசதிகள் வேண்டி-18, இதரதுறைகள் சாா்பாக -325 என மொத்தம் 418 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு தகுதியான பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க அலுவலா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் சு.சுரேஷ், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) வெங்கட்ராமன், தனித்துணை ஆட்சியா்(சபாதி) பாலமுருகன், மாற்றுத்திறனாளி நல அலுவலா் சீனிவாசன் மற்றும் அலுவலா்கள் பங்கேற்றனா்.