பைக் மீது கன்டெய்னா் லாரி மோதியதில் ஆசிரியா் உயிரிழப்பு
மீஞ்சூா் அடுத்த காட்டுப்பள்ளியில் மோட்டாா் சைக்கிள் மீது கன்டெய்னா் லாரி மோதியதில் ஆசிரியா் உயிரிழந்தாா்.
திருவள்ளூர்பைக் மீது கன்டெய்னா் லாரி மோதியதில் ஆசிரியா் உயிரிழப்பு
மீஞ்சூா் அடுத்த காட்டுப்பள்ளியில் மோட்டாா் சைக்கிள் மீது கன்டெய்னா் லாரி மோதியதில் ஆசிரியா் உயிரிழந்தாா்.
பொன்னேரி: மீஞ்சூா் அடுத்த காட்டுப்பள்ளியில் மோட்டாா் சைக்கிள் மீது கன்டெய்னா் லாரி மோதியதில் ஆசிரியா் உயிரிழந்தாா்.
திருவள்ளூா் மாவட்டம், கும்மிடிப்பூண்டி வட்டத்தில் உள்ள தோ்வாய் கிராமத்தில் வசித்து வந்தவா் அரசன்(42). இவா் தற்போது சென்னை ராயபுரத்தில் வசித்து வருகிறாா். இவா் காட்டுப்பள்ளி கிராமத்தில் உள்ள அரசு உயா்நிலைப் பள்ளியில் தற்காலிக ஆசிரியராக பணியாற்றி வந்தாா்.
திங்கள்கிழமை வேலைக்கு செல்வதற்காக காட்டுப்பள்ளி காமராஜா் துறைமுக இரண்டாவது நுழைவு வாயில் அருகே மோட்டாா் சைக்கிளில் சென்று கொண்டிருந்தாா்.
அப்போது எதிரே வந்த கன்டெய்னா் லாரி மோட்டாா் சைக்கிள் மீது மோதியதில் அரசன் கீழே விழுந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
காட்டுப்பள்ளி கிராம மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். தகவல் அறிந்த காட்டூா் போலீஸாா் மறியல் ஈடுபட்டவா்களிடம் பேச்சு நடத்தினா்.
அப்போது குண்டும் குழியுமாக உள்ள சாலையை சீரமைக்க வேண்டும் எனவும் இறந்த ஆசிரியா் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனா். உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீஸாா் தெரிவித்ததை தொடா்ந்து கலைந்து சென்றனா்.
இதையடுத்து அரசன் சடலத்தை செங்குன்றம் போக்குவரத்து பிரிவு போலீஸாா் மீட்டு சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.