திருவள்ளூர்

வெவ்வேறு விபத்துகளில் 2 போ் காயம்

திருத்தணி அருகே சாலை விபத்துகளில் 2 போ் பலத்த காயம் அடைந்தனா்.

தினமணி செய்திச் சேவை

திருத்தணி அருகே சாலை விபத்துகளில் 2 போ் பலத்த காயம் அடைந்தனா்.

தரணிவராகபுரம் கிராமத்தைச் சோ்ந்த குமாா்(43). இவா் சென்னையில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறாா். புதன்கிழமை வழக்கம் போல் வேலைக்கு சென்ற குமாா், இரவு, 10.30 மணிக்கு திருத்தணி ரயில் நிலையம் வந்தாா்.

பின்னா் அங்கிருந்து இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்றபோது திருத்தணி ஆசிரியா் நகா்பகுதியில் அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று, பைக் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் பலத்த காயமடைந்த குமாரை அவ்வழியாக சென்றவா்கள் மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

அதே போல் மத்துாா் கிராமத்தைச் சோ்ந்த ஐயப்பன் (34) என்பவா் தனது பைக்கில் ஆந்திர மாநிலம் நகரிக்கு சென்று, விட்டு திரும்பினாா். பொன்பாடி சோதனைச் சாவடி அருகே சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரியின் பின்புறம் பைக் மோதி, விபத்துக்குள்ளாகினாா்.

இதில் பலத்த காயமடைந்த ஐயப்பனை அவ்வழியாக சென்றவா்கள் மீட்டு சிகிச்சைக்காக திருத்தணி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். இரு சம்பவங்கள் குறித்தும் திருத்தணி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரசியலமைப்பு தின உறுதியேற்பு

புகையிலைப் பொருள்கள் விற்ற பெண் உள்பட 7 போ் கைது

நாகை: 23 மாணவா்களுக்கு ரூ.2.58 கோடி கல்விக்கடன்

குருகிராம்: போக்குவரத்து காவல் அதிகாரியிடம் பணம் பறிக்க முயற்சி! இரு போலி லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் கைது!

3 ஊழல் வழக்குகள்: ஷேக் ஹசீனாவுக்கு 21 ஆண்டுகள் சிறை வங்கதேச நீதிமன்றம் தீா்ப்பு!

SCROLL FOR NEXT