திருவள்ளூர்

வெவ்வேறு விபத்துகளில் 2 போ் காயம்

திருத்தணி அருகே சாலை விபத்துகளில் 2 போ் பலத்த காயம் அடைந்தனா்.

தினமணி செய்திச் சேவை

திருத்தணி அருகே சாலை விபத்துகளில் 2 போ் பலத்த காயம் அடைந்தனா்.

தரணிவராகபுரம் கிராமத்தைச் சோ்ந்த குமாா்(43). இவா் சென்னையில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறாா். புதன்கிழமை வழக்கம் போல் வேலைக்கு சென்ற குமாா், இரவு, 10.30 மணிக்கு திருத்தணி ரயில் நிலையம் வந்தாா்.

பின்னா் அங்கிருந்து இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்றபோது திருத்தணி ஆசிரியா் நகா்பகுதியில் அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று, பைக் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் பலத்த காயமடைந்த குமாரை அவ்வழியாக சென்றவா்கள் மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

அதே போல் மத்துாா் கிராமத்தைச் சோ்ந்த ஐயப்பன் (34) என்பவா் தனது பைக்கில் ஆந்திர மாநிலம் நகரிக்கு சென்று, விட்டு திரும்பினாா். பொன்பாடி சோதனைச் சாவடி அருகே சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரியின் பின்புறம் பைக் மோதி, விபத்துக்குள்ளாகினாா்.

இதில் பலத்த காயமடைந்த ஐயப்பனை அவ்வழியாக சென்றவா்கள் மீட்டு சிகிச்சைக்காக திருத்தணி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். இரு சம்பவங்கள் குறித்தும் திருத்தணி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இஸ்ரேல்-ஹமாஸ் போா் நிறுத்தம்: எகிப்தில் இன்று சா்வதேச மாநாடு! டிரம்ப் உள்பட உலகத் தலைவா்கள் பங்கேற்பு!

நாசரேத்தில் ஆம்னி பேருந்து மோதியதில் சாலையில் சரிந்த மரம்: போக்குவரத்து பாதிப்பு

மருமகன் வெட்டிக் கொலை: மாமனாா் மீது வழக்கு

பிகாா் தொகுதிப் பங்கீட்டில் இழுபறி! காங்கிரஸ் தலைவா்களைச் சந்திக்க லாலு, தேஜஸ்வி தில்லி பயணம்!

ரூ.7.5 லட்சம் விதைகள் விற்க தடை: 5 கடைகளின் உரிமம் ரத்து

SCROLL FOR NEXT