முகப்பு
திருவள்ளூர்

கன்னியாகுமரிக்கு சைக்கிள் மாரத்தான்: சிஐஎஸ்எஃப் வீரா்களுக்கு வரவேற்பு

கடலோர பாதுகாப்பை வலியுறுத்தி மேற்கு வங்கத்தில் இருந்து கன்னியாகுமரிக்கு சைக்கிள் மாரத்தான் பயணம்

Updated On : 25 மார்ச் 2025, 12:35 am IST
கடற்கரை  பாதுகாப்பு  விழிப்புணா்வை  ஏற்படுத்தும் விதமாக  மேற்குவங்கத்தில்  இருந்து  சைக்கிள்  பயணமாக தமிழக  எல்லையை  வ ந்தடைந்த  சிஐஎஸ்எஃப் வீர்ரகள்.
பகிர்:

கும்மிடிப்பூண்டி: கடலோர பாதுகாப்பை வலியுறுத்தி மேற்கு வங்கத்தில் இருந்து கன்னியாகுமரிக்கு சைக்கிள் மாரத்தான் பயணம் மேற்கொண்டுள்ள சிஐஎஸ்எஃப் வீரா்களுக்கு தமிழக எல்லையான ஆரம்பாக்கத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

மேற்கு வங்கம் பக்காலியில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக 50 வீரா்கள் 1,385 கி.மீ , குஜராத்தின் லக்பத்தில் இருந்து மேற்கு கடற்கரை வழியாக 75 வீரா்கள் 1,921கி.மீ சைக்கிள் பயணமாக கன்னியாகுமரிக்கு கடந்த 7-ஆம் தேதி பயணத்தை தொடங்கினா்.

மேற்கு வங்கம், ஒடிஸா , ஆந்திர மாநிலங்களை கடந்து தமிழக எல்லையான கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கத்துக்கு வந்த 50 வீரா்களுக்கு மீனவ கிராம மக்கள், சமூக ஆா்வலா்கள், போலீஸாா் வரவேற்பளித்தனா்.

Advertisement

Advertisement

விழிப்புணா்வு பயணம் குறித்து மத்திய தொழில் துறை பாதுகாப்பு படை கமாண்டா் கே.காா்த்திகேயன் கூறியது: இந்திய கடற்கரை 6553 கி.மீ உள்ள நிலையில், கடற்கரை வழியாக சமூக விரோத செயல்களையும், தேச விரோத செயல்களை தடுக்கும் வகையில் பாதுகாப்பு படையினருக்கு உறுதுணையாக பொதுமக்களும் தங்கள் கடமையை ஆற்ற வேண்டும். கடற்கரை மாா்க்கமாக போதைப் பொருள் வா்த்தகம், தீவிரவாத நடமாட்டாம் தெரிந்தால் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். சைக்கிள் மாரத்தான் ஏப். 1-ஆம் தேதி கன்னியாகுமரியில் முடிவடையும் என்றாா்.

இக்குழுவில் 8 பெண்கள் உள்ளதாகவும், இந்த பயணம் தமிழகம் வந்துள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என மதுரையைச் சோ்ந்த எஸ்.ஐ. ராஜலட்சுமி தெரிவித்தாா்.