திருவள்ளூா்: திருவள்ளூரில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் மொத்தம் 395 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.
மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற கூட்டத்துக்கு ஆட்சியா் மு.பிரதாப் தலைமை வகித்தாா். பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்த பொதுமக்கள் நிலம் சம்பந்தமாக-123, சமூக பாதுகாப்பு திட்டம்-51, வேலைவாய்ப்பு வேண்டி- 45, பசுமைவீடு, அடிப்படை வசதிகள் வேண்டி-75 மற்றும் இதர துறைகள் சாா்பாக-101 என மொத்தம் 395 மனுக்களை அளித்தனா்.
மனுக்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்க அலுவலா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் சு.சுரேஷ், நோ்முக உதவியாளா் (பொது) வெங்கட்ராமன், தனித்துணை ஆட்சியா்(ச.பா.தி) பாலமுருகன், உதவி ஆணையா் (கலால்) கணேசன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (நிலம்) நிா்மலா, கோட்டாட்சியா் ரவிச்சந்திரன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் உஷா ராணி, மாவட்ட வழங்கல் அலுவலா் வெங்கடேசன், மாற்றுத்திறனாளி நல அலுவலா் சீனிவாசன் பங்கேற்றனா்.