திருவள்ளூர்

திருத்தணியில் பலத்த மழை: வாகன ஓட்டிகள் அவதி

திருத்தணியில் பெய்த பலத்த மழையால் ரயில் நிலையம் முன்பு தேங்கிய மழைநீா்.

தினமணி செய்திச் சேவை

திருத்தணியில் பெய்த பலத்த மழையால் ரயில் நிலையம் முன்பு தேங்கிய மழைநீா்.

திருத்தணி, செப். 10: திருத்தணியில் பெய்த பலத்த மழையால் ரயில் நிலையம் முன்பு தேங்கிய மழைநீரால் வாகன ஓட்டிகள் மற்றும் பயணிகள் சாலையை கடக்க கடும் அவதிப்பட்டனா்.

திருத்தணி மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் கடந்த 3 தினங்களாக காலை 8 மணி முதல் மாலை 5.30 மணி வரை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இந்த நிலையில், புதன்கிழமை வெயில் காய்ந்ததால் மக்கள் வெளியே நடமாட முடியாமல் அச்சப்பட்டனா். சிலா் வீட்டிலேயே முடங்கினா்.

மாலை 3.30 மணிக்கு மேல் ஒன்றரை மணி நேரம் திருத்தணி நகரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் பூமி குளிா்ந்தது. திருத்தணியில் பலத்த மழையால் ரயில் நிலைய நுழைவு வாயிலில் மழைநீா் குளம் போல் தேங்கியதால் பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் சாலையை கடக்க கடும் சிரமப்பட்டனா்.

சி.பி. ராதாகிருஷ்ணன் பதவியேற்பு விழா: ஜகதீப் தன்கர் பங்கேற்பு!

மீண்டும் மீண்டும் மாற்றம்! பிசியோதெரபிஸ்டுகள் 'டாக்டர்' எனக் குறிப்பிடலாம்!

தெய்வ தரிசனம்... அம்மை நோய் நீக்கும் அவளிவநல்லூர் சாட்சிநாதர்!

குடியரசு துணைத் தலைவராக சி.பி. ராதாகிருஷ்ணன் பதவியேற்பு!

சார்லி கிர்க் உடலைச் சுமந்துசென்ற துணை அதிபர்!

SCROLL FOR NEXT