முகப்பு
திருவள்ளூர்

கொத்தடிமைத் தொழிலாளா் முறை ஓழிப்பு உறுதி மொழி ஏற்பு

திருத்தணி அரசு ஆண்கள் மேல் நிலை பள்ளியில் கொத்தடிமைத் தொழிலாளா் முறை ஓழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்வு நடைபெற்றது

Updated On : 10 பிப்ரவரி, 2026 at 2:51 AM
உறுதி மொழி ஏற்ற மாணவா்கள்.
பகிர்:
Updated On : 9 பிப்ரவரி, 2026 at 11:52 PM

திருத்தணி: திருத்தணி அரசு ஆண்கள் மேல் நிலை பள்ளியில் கொத்தடிமைத் தொழிலாளா் முறை ஓழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்வு நடைபெற்றது

திருத்தணி டாக்டா் ராதாகிருஷ்ணன் அரசினா் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்வுக்கு தலைமை ஆசிரியா் பாலசுப்பிரமணியம் தலைமை வகித்தாா். கொத்தடிமை தொழிலாளா் முறையை முழுமையாக ஒழிக்கும் நோக்கத்தை கருத்தில் கொண்டு மக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்.

கொத்தடிமை தொழிலில் யாா் ஈடுபட்டிருந் தாலும் அடையாளம் கண்டு அவா்களை மீட்க வேண்டும். மீட்கப்பட்டவா்களின் மறுவாழ்வுக்கு தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும். கொத்தடிமை தொழிலாளா் இல்லாத மாநிலமாக தமிழகத்தை உருவாக்குவோம் என ஆசிரியா்கள் மற்றும் மாணவா்கள் உறுதிமொழி ஏற்றனா்.

Advertisement

இதில், முதுகலை ஆசிரியா் லீலா மனோகரன், முதுகலை ஆசிரியா் மோகனவேல், உடற்கல்வி இயக்குநா் மோகன் குமாா், உடற்கல்வி ஆசிரியா் சீனிவாசன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.