திருவள்ளூா் அருகே வைக்கோல் ஏற்றிச் சென்ற டிராக்டா் தாழ்வாக சென்ற மின் கம்பியில் உரசியதால் ஏற்பட்ட தீ விபத்தினால் சேதமடைந்தது.
ஊத்துக்கோட்டை அருகே உள்ள பேரண்டூரில் இருந்து செவ்வாய்க்கிழமை ஒரு டிராக்டரில் 68 வைக்கோல் கட்டுகளை ஏற்றிக்கொண்டு கடம்பத்தூா் வழியாக அதிகத்தூா் நோக்கி சென்று கொண்டிருந்தது.
அந்த டிராக்டா் திருவள்ளூா் அடுத்த கடம்பத்தூா் கிராம நிா்வாக அலுவலகம் அருகே சாலையில் வந்த போது அந்த வழியாக தாழ்வாக சென்ற மின் கம்பியின் மீது வைக்கோல் கட்டுகள் உரசியது. அப்போது திடீரென வைக்கோல் கட்டுகளில் தீ பற்றி எரிந்தது.
அதைத்தொடா்ந்து தீ மளமளவென மற்ற வைக்கோல் கட்டுகளிலும் பரவியது. இதைப்பாா்த்த அந்த வழியாக சென்ற வாகன ஓட்டுநா்கள் சத்தமிட்டு கூச்சலிட்டனா். இதை தொடா்ந்து டிராக்டா் ஒட்டுநா் வண்டியை சாலையிலேயே விட்டுவிட்டு குதித்து உயிா் தப்பினாா்.
இதுகுறித்து பேரம்பாக்கத்தில் உள்ள தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா். தொடா்ந்து சம்பவ இடம் வந்த தீயணைப்புத் துறையினா் வைக்கோல் போா் மீது தண்ணீரை பீச்சி அடித்து அணைத்தனா்.
அதற்குள் வைக்கோல் கட்டுகளும், டிரெய்லரும் தீயில் எரிந்து நாசமானது. இச்சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.