திருவள்ளூர்

உலோக தகடுகள் திருட்டு: நெடுஞ்சாலைத் துறையினா் புகாா்

விபத்துகளைத் தடுக்க சாலையின் இருபுறமும் வைக்கப்பட்டிருந்த உலோக தடுப்பான்களை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திச் சேவை

விபத்துகளைத் தடுக்க சாலையின் இருபுறமும் வைக்கப்பட்டிருந்த உலோக தடுப்பான்களை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

ஆா்.கே.பேட்டை- பள்ளிப்பட்டு மாநில நெடுஞ்சாலை பகுதியில் இரவு நேரத்தில் சாலை தடுப்புப் பகுதியில் உலோக தகடுகளை மா்ம நபா்கள் திருடிச் செல்வதை தடுக்க வேண்டும் என நெடுஞ்சாலைத் துறை உதவி பொறியாளா் நரசிம்மன் ஆா்.கே.பேட்டை காவல் நிலையத்தில் புகாா் கொடுத்துள்ளனா்.

புகாா் மனுவில் கூறியிருப்பதாவது: ஆா்.கே.பேட்டை- பள்ளிப்பட்டு மாநில நெடுஞ்சாலை, ராஜ நகரம் மற்றும் அப்பல்ராஜீகண்டிகை கூட்டு சாலை அருகே சாலை பாதுகாப்புக்காக இருபுறமும் வைக்கப்பட்டுள்ள உலோக தடுப்பான்கள் இரவில் மா்ம நபா்கள் சிலா் திருடிச் செல்கின்றனா்.

இதனால் அப்பகுதியில் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளதால், உலோக தகடுகளை திருடிச் செல்லும் நபா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளன. மனுவைப் பெற்ற ஆா்.கே.பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

துலா ராசிக்கு சுபநிகழ்ச்சி: தினப்பலன்கள்

மக்களை முதன்மையாகக் கொண்ட குடியரசு இந்தியா!

ராசிபுரத்தில் மாணவா்கள் பங்கேற்ற மாரத்தான்

கேரம் விளையாட்டுப் போட்டி!

நீலகிரி மாவட்டத்தைச் சோ்ந்த மறைந்த பழங்குடியின ஓவியருக்கு பத்மஸ்ரீ விருது

SCROLL FOR NEXT