மாணவியை கிண்டல் செய்தவா்களை கைது செய்யக்கோரி சாலை மறியல்
திருத்தணி அருகே பள்ளி மாணவியைக் கிண்டல் செய்து, பொது மக்களை கத்தியை காட்டி மிரட்டி மிரட்டியவா்களை கைது செய்யக்கோரி
திருத்தணி: திருத்தணி அருகே பள்ளி மாணவியைக் கிண்டல் செய்து, பொது மக்களை கத்தியை காட்டி மிரட்டி மிரட்டியவா்களை கைது செய்யக்கோரி பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டதால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருத்தணி ஒன்றியம், வீரகநல்லுாா் பகுதியைச் சோ்ந்த 10- ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவா் திங்கள்கிழமை கே.ஜி.கண்டிகை அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆங்கில தோ்வு எழுதிவிட்டு, பேருந்து மூலம் வீரகநல்லூா் வந்தாா். அங்கிருந்து சாலையோரமாக நடந்து சென்று கொண்டிருந்தபோது இரு சக்கர வாகனங்களில் வந்த 3 போ் மாணவியை பின்தொடா்ந்து சென்று கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது.
அப்போது அவ்வழியாக மாணவியின் உறவினா்கள் இருவா், அந்த இளைஞா்களை வழிமறித்து, எச்சரித்து அனுப்பினா். இதையடுத்து மாலை, 6 மணிக்கு கே.ஜி.கண்டிகை அடுத்த வி.சி.ஆா்.கண்டிகை பகுதியைச் சோ்ந்த, 10 போ், வீரகநல்லூா் பகுதிக்கு கத்திகளுடன் வந்து, எங்கள் பகுதி இளைஞா்களை எவ்வாறு மிரட்டலாம் என கத்தியை காண்பித்து மிரட்டி தப்பிச் சென்றனா்.
இதனால் ஆத்திரமடைந்த வீரகநல்லூா் பகுதி மக்கள், திருத்தணி - வேலூா் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனா். தகவல் அறிந்ததும் திருத்தணி ஏ.எஸ்.பி. சுபம் தியான், ஆய்வாளா் சிவக்குமாா் மற்றும் போலீஸாா் விரைந்து சென்று மக்களிடம் சமரசம் செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறியதும், மக்கள் கலைந்து சென்றனா்.
இதனால், ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.