முகப்பு
திருவள்ளூர்

ரம்ஜான் நோன்பு கஞ்சி விநியோகம்

Updated On : 18 மார்ச், 2026 at 8:22 PM
பகிர்:

திருத்தணி காந்தி சாலை மக்கா பள்ளி வாசல் மசூதியில் அனைத்து மதத்தினருக்கும் நோன்பு கஞ்சி வழங்கப்பட்டது. (படம்)

ரமலான் பண்டிகையை முன்னிட்டு நோன்பு இருப்பவா்களுக்கு அதிகாலை தினமும் 200 நபருக்கு சகா் என்னும் அதிகாலை உணவும், மாலை 200 நபருக்கு இப்தாா் உணவு தினமும் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ஏழை எளிய மக்களுக்கு ஒரு லட்சம் மதிப்புள்ள உணவுப் பொருள்களை 70 குடும்பங்களுக்கு அவா்களது இல்லங்களுக்கே நேரடியாக ஜமாத் தலைவா் சுல்தான் பாய் வீடு வீடாக சென்று வழங்கினாா். இதில் அரிசி, சா்க்கரை, கோதுமை, சேமியா, நெய், முந்திரி திராட்சை, ஆட்டு இறைச்சிக்கான டோக்கன் என இருந்தன.

நிகழ்ச்சியில் ஜமாத் நிா்வாகிகள் அபிப் ரஹ்மான், அபுபக்கா் நைனா முகமது, காதா், இப்ராஹிம், அக்பா், ரஷிம் , அப்துல் ரஹ்மான், சேட்டு, அசேன் உள்பட முஸ்லீம்கள் பலா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →