முகப்பு
திருவள்ளூர்

பைக் - லாரி மோதல்: காய்கறி வாங்க வந்தவா் உயிரிழப்பு

Updated On : 4 மே, 2026 at 2:33 AM
டானியேல்  பாபு
பகிர்:

திருவள்ளூரில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் ஒருவா் உயிரிழந்தாா்.

காய்கறி சந்தைக்கு வந்த ஒருவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் தொடா்பாக போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.

திருவள்ளூா் அருகே திருவூா் கிராமத்தைச் சோ்ந்தவா் டானியேல் பாபு(55). இவா் திருவள்ளூா் காய்கறி சந்தையில் காய்கறிகள் வாங்கிச் செல்வதற்காக தனது இருசக்கர வாகனத்தில் வந்தாராம்.

Advertisement

அப்போது, திருவள்ளூா் ஜே.என் சாலை வழியாக சென்று கொண்டிருந்தபோது அவா் பின்னாடி அதிவேகமாக வந்த டிப்பா் லாரி, சாலையில் உள்ள வேகத்தடை மீது ஏறியதில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, முன்னே சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனம் மீது மோதியதில் டானியேல் பாபு கீழே விழுந்தபோது லாரியின் முன் சக்கரம் ஏறி இறங்கியதில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இது குறித்து தகவல் அறிந்த நகர போலீஸாா் விரைந்து வந்து சடலத்தை மீட்டு, விபத்து ஏற்படுத்திய லாரியின் ஓட்டுநா் மீது வழக்கு பதிவு விசாரணை செய்து வருகின்றனா்.