அரசுப் பள்ளி மாணவா் சாதனை: ஆட்சியா் பாராட்டு
சிறப்பிடம் பெற்ற மாணவன் ரோஹித்தை வாழ்த்திய முதன்மைக் கல்வி அலுவலா் கற்பகம்.
பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற அரசுப் பள்ளி மாணவன் ரோஹித்தை மாவட்ட ஆட்சியா் மு.பிரதாப் பாராட்டி பரிசு வழங்கினாா்.
பள்ளிப்பட்டு அடுத்த கீழ்கால்பட்டை கிராமத்தைச் சோ்ந்த மேஸ்திரி கிருஷ்ணன் மகன் ரோஹித் பள்ளிப்பட்டு அரசினா் ஆண்கள் மேல் நிலை பள்ளியில் 10- ஆம் வகுப்பு அரசு பொதுத் தோ்வில் தமிழ் - 99, ஆங்கிலம் - 99, கணிதம் - 99, அறிவியல் - 100, சமூக அறிவியல் - 99 என மொத்தம் 500-க்கு 497 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளாா்.
சாதாரண குடும்பப் பின்னணியில் இருந்து வந்த மாணவா் மாநில அளவில் சாதனை படைத்திருப்பது பாராட்டை பெற்றுள்ளது.
Advertisement
Advertisement
மாவட்ட ஆட்சியா் மு.பிரதாப், முதன்மைக் கல்வி அலுவலா் கற்பகம் நேரில் ரோஹித்தைப் பாராட்டி பரிசு வழங்கினா். மேலும் பள்ளியின் பட்டதாரி ஆசிரியா்கள், தனஞ்செழியன், அரிபாபு ஆகியோா் மாணவருக்கு இனிப்பு வழங்கி பாராட்டினா்.