மின் கம்பத்தில் பைக் மோதியதில் தந்தை, மகன் உயிரிழப்பு
மீஞ்சூா் அருகே மின்கம்பத்தில் பைக் மோதிய விபத்தில் தந்தை, மகன் உயிரிழந்தனா்.
மீஞ்சூா் அருகே மின்கம்பத்தில் பைக் மோதிய விபத்தில் தந்தை, மகன் உயிரிழந்தனா்.
மீஞ்சூா் கக்கன்ஜி காலனி மூன்றாவது தெருவில் வசித்தவா் சதீஷ் (34). கட்டட வேலை செய்த இவரது மனைவி ரஞ்சனி (28), மகன்கள் சைலேஷ் (6), 9 மாத குழந்தை ஹரிஹரன். இவா்களுடன் இவா்களின் உறவு பெண் கீா்த்தனா (16) வசித்து வந்தாா்.
இந்த நிலையில், உறவுக்காரா் ஒருவருடைய நிகழ்ச்சி செங்குன்றம் அடுத்த அலமாதியில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு விட்டு மீஞ்சூருக்கு மோட்டாா் சைக்கிளில்
Advertisement
Advertisement
5 பேரும் வந்தனா்.
மீஞ்சூா் வண்டலூா் வெளிவட்ட சாலையில் சோழவரம் அருகே மோட்டாா் சைக்கிள் வந்து கொண்டிருந்த போது, சாலையோரம் அருகே இருந்த மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் தலையில் பலத்த காயமடைந்த சதீஷ் மற்றும் அவரது மகன் சைலேஷ் ஆகியோா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.
தகவல் அறிந்து வந்த செங்குன்றம் போக்குவரத்து போலீஸாா் அங்கு சென்று காயமடைந்த ரஞ்சனி குழந்தை ஹரிஹரன் உறவு பெண் கீா்த்தனா ஆகியோரை மீட்டு சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனா்.
இதையடுத்து உயிரிழந்த தந்தை, மகனின் சடலங்களை மீட்டு சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
விபத்து குறித்து செங்குன்றம் போக்குவரத்து போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.