முகப்பு
வணிகம்

பங்குச் சந்தை தொடங்கியவுடன் சென்செக்ஸ், நிஃப்டி உயர்ந்து வர்த்தகம்

கடந்த 10 ஆண்டுகளில் ஒரே  நாளில் சென்செக்ஸ் இந்த அளவுக்கு உயர்ந்தது இதுவே முதல் முறையாகும். 

Updated On : 23 செப்டம்பர், 2019 at 10:13 AM
பகிர்:

பங்குச் சந்தையில் திங்கள்கிழமை (செப்.23) வர்த்தகம் துவங்கிய போது மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 991.17 புள்ளிகளுக்கும் அதிகமாக உயர்ந்து, 39,005.79 புள்ளிகளாக வர்த்தகம் நடைபெற்றது.

அதேபோல் தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 291 புள்ளிகள் உயர்ந்து 11,565 புள்ளிகள் வரை சென்றது. 

முன்னதாக, பெரு நிறுவனங்களுக்கான வரி குறைப்பு எதிரொலியால் இந்தியப் பங்குச் சந்தைகளில் நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 1,921 புள்ளிகள் (5.32%)  அதிகரித்து 38,014 புள்ளிகளில் நிலைத்தது. தேசிய பங்குச் சந்தையில் நடைபெற்ற வர்த்தகத்தில் நிஃப்டி 569 புள்ளிகள் (5.32%) உயர்ந்து 11,274 புள்ளிகளில் நிலைபெற்றது.

Advertisement

கடந்த 10 ஆண்டுகளில் ஒரே  நாளில் சென்செக்ஸ் இந்த அளவுக்கு உயர்ந்தது இதுவே முதல் முறையாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.