பங்குச்சந்தை வணிகம் உயர்வுடன் தொடக்கம்
பங்குச்சந்தை வர்த்தகத்தில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி இன்று காலை உயர்வுடன் தொடங்கியது.
பங்குச்சந்தை வர்த்தகத்தில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி இன்று காலை உயர்வுடன் தொடங்கியது.
இந்த வாரத்தின் தொடக்கத்திலிருந்து தொடர்ந்து மூன்று நாள்களாக உயர்வுடன் தொடங்கி உயர்வுடன் முடிவடைந்த வர்த்தகம், நேற்று சரிவுடன் தொடங்கி சரிவுடன் முடிவடைந்தது. இந்நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) வர்த்தகம் உயர்வுடன் தொடங்கியுள்ளது.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 273.84 புள்ளிகள் உயர்ந்து 46,227.11 புள்ளிகளாக வர்த்தகம் தொடங்கியது. மொத்த வர்த்தகத்தில் இது 0.59 சதவிகிதம் உயர்வாகும்.
இதேபோன்று தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 75.05 புள்ளிகள் உயர்ந்து 13,558.35 புள்ளிகளாக வர்த்தகம் தொடங்கியது. மொத்த வர்த்தகத்தில் இது 0.59 சதவிகிதம் உயர்வாகும்.
பங்குச்சந்தையில் ரிலையன்ஸ், எச்.டி.எஃப்.சி., ஐசிஐசிஐ வங்கி ஆகிய நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் கண்டுள்ளன.
அதிகபட்சமாக ஒ.என்.ஜி.சி நிறுவனத்தின் பங்குகள் 9.72 சதவிகிதம் உயர்ந்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக என்.டி.பி.சி. 4.47 சதவிகிதமும், டாடா ஸ்டீல் 1.78 சதவிகிதமும் உயர்ந்துள்ளது.