வணிகம்

பயனாளர்களின் புகைப்பட சேகரிப்பை நிறுத்து.. 'க்ளியர்வியூ ஏஐ'க்கு ஃபேஸ்புக் வலியுறுத்தல்

DIN


டிவிட்டர் மற்றும் யூடியூப்புடன் இணைந்து, ஃபேஸ்புக் மற்றும் லிங்க்ட்-இன் ஆகிய சமூக தளங்களும், பயனாளர்களின் புகைப்படங்கள் சேகரிப்பை நிறுத்துமாறு க்ளியர்வியூ ஏஐ-யை வலியுறுத்தியுள்ளன.

தங்களது சமூக வலைத்தளங்களில் இருந்து, பயனாளர்களின் புகைப்படங்களை சேகரிப்பதை நிறுத்த வேண்டும் என்று நான்கு சமூக வலைத்தளங்கள் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. 

க்ளியர்வியூ ஏஐ என்ற சர்ச்சைக்குரிய செல்போன் செயலி, சுமார் 100 கோடி புகைப்படங்களை பயன்படுத்தி வருவதும், இவை அனைத்தும் ஃபேஸ்புக், யூடியூப், டிவிட்டர் பக்கங்களில் இருந்து எடுக்கப்பட்டவை என்பதும் குறிப்பிடத்தக்கது. 

இதையடுத்து, எங்களது விதிமுறைகள் மற்றும் கொள்கைகளுக்கு எதிராக, பயனாளர்களின் தகவல்கள் திருடப்படுவதை ஒருபோதும் நாங்கள் அனுமதிக்க முடியாது என்றும், உடனடியாக புகைப்படங்களை எடுப்பதை க்ளியர்வியூ நிறுத்த வேண்டும் என்றும் ஏற்கனவே டிவிட்டர், யூடியூப் ஆகியவை வலியுறுத்திய நிலையில், தற்போது ஃபேஸ்புக் மற்றும் லிங்க்ட்இன்-னும் இதே கோரிக்கையை முன் வைத்துள்ளன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

SCROLL FOR NEXT