வணிகம்

பங்குச்சந்தைகள் வரலாறு காணாத வீழ்ச்சி; சென்செக்ஸ் 2,300 புள்ளிகள் சரிவு

DIN

இந்திய பங்குச்சந்தைகள் வரலாறு காணாத அளவு சரிவை சந்தித்துள்ளன. 

மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று 36,950.20 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கிய நிலையில் தொடர்ந்து சரிவை சந்தித்து வந்தது. பிற்பகல் 1.20 மணியளவில் சென்செக்ஸ் 2300 புள்ளிகள் சரிந்து 35,256ல் வர்த்தகமானது. அதேபோன்று தேசிய பங்குச்சந்தை நிஃப்டி, 574 புள்ளிகள் சரிந்து 10,415ல் வர்த்தகம் ஆனது. 

கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பங்குச்சந்தைகள் மிகப்பெரும் சரிவை சந்தித்துள்ளது. 

கச்சா எண்ணெய் விலை, இந்திய ரூபாய் மதிப்பு மற்றும் கரோனா வைரஸ் தாக்கத்தினால் வரலாறு காணாத சரிவை சந்தித்துள்ளதாக பங்குச்சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். 

அதிகபட்சமாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் 10% வீழ்ச்சி அடைந்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி: 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்காது!

டேவிட் வார்னரின் சாதனையை சமன் செய்த விராட் கோலி!

காங். ஆட்சியில் மத அடிப்படையில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த திட்டம் -பிரதமர் மோடி பிரசாரம்

நீ, நீயாகவே இரு, உலகம் அனுசரித்துப் போகும்! எதிர்நீச்சல் ஜனனிதான்...

வரலாறு காணாத வெப்பத்திற்கு காரணம் என்ன? : ரமணன் பேட்டி

SCROLL FOR NEXT