முகப்பு
வணிகம்

பங்குச்சந்தை சென்செக்ஸ், நிஃப்டி உயர்வுடன் தொடக்கம்

பங்குச்சந்தை புள்ளிகள் நேற்று வரலாறு காணாத வகையில் சரிந்த நிலையில் இன்று காலை உயர்வுடன் தொடங்கின.

Updated On : 22 ஜூலை, 2025 at 9:47 AM
பங்குச்சந்தை சென்செக்ஸ், நிஃப்டி உயர்வுடன் தொடக்கம் (கோப்புப்படம்)
பகிர்:

பங்குச்சந்தை புள்ளிகள் நேற்று வரலாறு காணாத வகையில் சரிந்த நிலையில் இன்று காலை உயர்வுடன் தொடங்கின.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 311.22 புள்ளிகள் உயர்ந்து 40039.63 புள்ளிகளாக வர்த்தகம் தொடங்கியது. இது மொத்த வர்த்தகத்தில் 0.79 சதவிகிதம் உயர்வாகும்.

இதேபோன்று தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 80 புள்ளிகள் உயர்ந்து 11760.40 புள்ளிகளாக வர்த்தகம் தொடங்கியது. மொத்த வர்த்தகத்தில் இது 0.68 சதவிகிதம் உயர்வாகும்.

இந்திய பங்குச்சந்தைககள் நேற்று வரலாறு காணாத அளவில் கடும் சரிவைச் சந்தித்தன. இதனால் முதலீட்டாளர்கள் இழப்பை சந்தித்த நிலையில் இன்று சற்று ஏற்றத்துடன் பங்குச்சந்தைகள் துவங்கியுள்ளன. இது முதலீட்டாளர்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →