வர்த்தக ஆண்டின் முதல்நாள்: ஏறுமுகத்தில் சென்செக்ஸ்
வர்த்தக ஆண்டு தொடக்கத்தின் முதல் நாளான இன்று (ஏப்ரல் 1) பங்குச்சந்தை வணிகம் உயர்வுடன் தொடங்கியது. சென்செக்ஸ் 235 புள்ளிகளும், நிஃப்டி 78 புள்ளிகளும் உயர்ந்தன.
வர்த்தக ஆண்டு தொடக்கத்தின் முதல் நாளான இன்று (ஏப்ரல் 1) பங்குச்சந்தை வணிகம் உயர்வுடன் தொடங்கியது. சென்செக்ஸ் 235 புள்ளிகளும், நிஃப்டி 78 புள்ளிகளும் உயர்ந்தன.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 235 புள்ளிகள் உயர்ந்து 49,680.09 புள்ளிகளாக வர்த்தகம் தொடங்கியது. இது மொத்த வர்த்தகத்தில் இது 0.35 சதவிகிதம் உயர்வாகும்.
இதேபோன்று தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 78 புள்ளிகள் உயர்ந்து 14,759.05 புள்ளிகளாக வர்த்தகம் தொடங்கியது. மொத்த வர்த்தகத்தில் இது 0.47 சதவிகிதம் உயர்வாகும்.
சென்செக்ஸ் பட்டியலிலுள்ள 30 முதல் தரப் பங்குகளில் 24 நிறுவனங்களின் பங்குகள் உயர்வுடன் காணப்பட்டன. மீதமுள்ள 6 நிறுவனங்களின் பங்குகள் சரிவைச் சந்தித்தன.
அதிகபட்சமாக எச்.சி.எல். டெக் 2.10 சதவிகிதமும், பஜாஜ் ஆட்டோ 1.91 சதவிகிதமும், என்.டி.பி.சி. 1.27 சதவிகிதமும், அல்ட்ராடெக் சிமெண்ட் 1.26 சதவிகிதமும் உயர்ந்து காணப்பட்டன.