மே 4 முதல் யாஹூ ஆன்ஸ்வர்ஸ் மூடப்படுகிறது 
வணிகம்

மே 4 முதல் யாஹூ கேள்வி-பதில் தளம் மூடப்படுகிறது

கேள்வி - பதில் தளமான யாஹூ ஆன்ஸ்வர்ஸ் வரும் மே 4-ஆம் தேதி முதல் மூடப்படவிருப்பதாகவும், அதிலிருக்கும் விவரங்கள் காப்பகப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

DIN

கேள்வி - பதில் தளமான யாஹூ ஆன்ஸ்வர்ஸ் வரும் மே 4-ஆம் தேதி முதல் மூடப்படவிருப்பதாகவும், அதிலிருக்கும் விவரங்கள் காப்பகப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2005-ஆம் ஆண்டு முதல் யாஹூ ஆன்ஸ்வர்ஸ் தளம் இயங்கி வருகிறது. 16 ஆண்டு கால வரலாறைக் கொண்டிருக்கும் யாஹூ ஆன்ஸ்வர்ஸின் அனைத்துப் பக்கங்களிலும் தற்போது மூடப்படும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

அதில், யாஹூ ஆன்ஸ்வர்ஸ் 2021, மே 4-ஆம் தேதி முதல் மூடப்படுகிறது.  முதல் நடவடிக்கையாக, ஏப்ரல் 20-ஆம் தேதி முதல், யாஹு ஆன்ஸ்வர்ஸ் இணையதளம் படிக்க மட்டுமே இயலும் தளமாக மாறும். அதேவேளையில், யாஹுவின் மற்ற சேவைகள் அல்லது யாஹூ கணக்கில் எந்த மாற்றமும் ஏற்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஏப்ரல் 20-ஆம் தேதி முதல் புதிய தகவல்கள் எதுவும் யாஹூ ஆன்வர்ஸில் பதிவேற்றம் செய்யப்படாது. ஆனால், அதிலிருக்கும் தகவல்களை பயனாளர்கள் படிக்க இயலும்.

மே 4ஆம் தேதி முதல் யாஹூ ஆன்ஸ்வர்ஸ் பக்கம் செயல்படாது. அது யாஹூ முகப்புப் பக்கத்துக்கு திருப்பி விடப்படும்.

யாஹூ ஆன்ஸ்வர்ஸில் இருக்கும் தங்களது தகவல்களை பதிவிறக்கம் செய்து கொள்வதற்கான கோரிக்கைகைளை வைக்க ஜூன் 30ம் தேதி தான் இறுதிநாள்.

ஒருவர் அளித்த தகவல்களை கோரிக்கை வைத்த 30 நாள்களில் பதிவிறக்கம் செய்து கொள்ளும் வசதி செய்து தரப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விமானத்தில் கல்விச் சுற்றுலா சென்ற புதுச்சேரி பள்ளியின் 18 மாணவா்கள்

அமைப்புசாரா தொழிலாளா்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க வலியுறுத்தல்

மறைந்த நடிகை ஸ்ரீதேவி குடும்பத்துக்கு நில இழப்பீடு வழங்கியதை எதிா்த்து வழக்கு

புதுவை கூட்டணி அரசு மீது பாஜக முன்னாள் அமைச்சா் சரமாரி குற்றச்சாட்டு

அரியலூரில் தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT