வணிகம்

சென்செக்ஸ் புள்ளிகள் 50 ஆயிரத்தைத் தாண்டியது

DIN

பங்குச்சந்தை வர்த்தகம் இன்று (ஏப்ரல் 8) உயர்வுடன் தொடங்கியது. செக்செக்ஸ் 420 புள்ளிகள் வரையும், நிஃப்டி 120 புள்ளிகள் வரையும் உயர்ந்தது.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 428.23 புள்ளிகள் உயர்ந்து 50,089.99 புள்ளிகளாக வர்த்தகம் தொடங்கியது. இது மொத்த வர்த்தகத்தில் இது 0.91 சதவிகிதம் உயர்வாகும்.

இதேபோன்று தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 128.80 புள்ளிகள் உயர்ந்து 14,954.80 புள்ளிகளாக வர்த்தகம் தொடங்கியது. மொத்த வர்த்தகத்தில் இது 0.92 சதவிகிதம் உயர்வாகும்.

சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 முதல்தர பங்குகளில், 27 நிறுவனங்களின் பங்குகள் நேர்மறையாக இன்றைய வர்த்தகத்தைத் தொடங்கின. 

அதிகபட்சமாக டெக் மஹிந்திரா 4.28 சதவிகிதமும், டைட்டன் கம்பெனி 2.03 சதவிகிதமும், டிசிஎஸ் 1.96 சதவிகிதமும், எச்.டி.எஃப்.சி. 1.84 சதவிகிதமும் உயர்ந்துள்ளன.

குறைந்தபட்சமாக பஜாஜ் ஆட்டோ 0.24  சதவிகிதமும், ஆர்.ஐ.எல். 0.16 சதவிகிதமும், பஜாஜ் பைனான்ஸ் 0.11 சதவிகிதமும் குறைந்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தோ்தல் பிரசாரத்தில் சிறுமி: பிடிபி தலைவா் மெஹபூபா முஃப்திக்கு நோட்டீஸ்

ம.பி.: பாஜகவில் இணைந்த 3-ஆவது காங்கிரஸ் எம்எல்ஏ

அரக்கோணம் ஸ்ரீ தா்மராஜா கோயில் தீமிதி விழா

திருவண்ணாமலை ரயிலில் அலைமோதும் கூட்டம்: கூடுதல் ரயில் இயக்க பயணிகள் கோரிக்கை

சீதா கல்யாண மகோற்சவம்: ஸ்ரீ விஜயேந்திரா் அருளாசி

SCROLL FOR NEXT