தாக்குதல்கள் நீடித்தால் அமெரிக்க நிறுவனங்கள் குறிவைத்து தாக்கப்படும்: ஈரான் எச்சரிக்கை!
ஹோர்முஸ் நீரிணைத் திறப்பு குறித்து ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி பேசியிருப்பவை...
ஈரானின் உள்கட்டமைப்புகள் மீதான தாக்குதல்கள் நீடித்தால் அமெரிக்க நிறுவனங்கள் குறிவைத்து தாக்கப்படும் என்று ஈரான் அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஈரானுக்கும் ஓமன் நாட்டும் இடையே உள்ள குறுகிய ஹோா்முஸ் நீரிணைப் பகுதியில் நூற்றுக்கணக்கான கப்பல்கள் மேற்கொண்டு செல்ல முடியாமல் தடைபட்டு நின்றன. இந்நிலையில், ஹோர்முஸ் நீரிணைத் திறப்பு குறித்து, ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி பேசியிருப்பதை அந்நாட்டு அரசு ஊடகம் வெளியிட்டுள்ளது.
அதில், “ஈரானின் உள்கட்டமைப்புகள், மையங்களை குறிவைத்தால் இப்பிராந்தியத்திலுள்ள அமெரிக்க நிறுவனங்களையும் எந்தெந்த நிறுவனங்களிலெல்லாம் அமெரிக்கா பங்குதாரராக இருக்கிறதோ அந்நிறுவனங்களின் கட்டமைப்புகளும் எங்களது படைகளால் குறிவைக்கப்படும்” என்று அவர் தெரிவித்திருப்பதாகவும், ஈரான் மிகக் கவனமாக, மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதிகளைத் தவிர்த்தே தாக்குதல்களை நடத்துவதாகவும், ஈரானின் எதிரிகள் மற்றும் அவர்களது கூட்டாளிகளின் சரக்கு கப்பல்களுக்கு மட்டுமே அனுமதி மறுத்து ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.