பங்குச்சந்தை 2-வது நாளாக உயர்வுடன் நிறைவு 
வணிகம்

பங்குச்சந்தை 2-வது நாளாக உயர்வுடன் நிறைவு

வர்த்தக நேர முடிவில் பங்குச்சந்தை வணிகம் உயர்வுடன் நிறைவடைந்தது. சென்செக்ஸ் 800 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்தது. 

DIN

வர்த்தக நேர முடிவில் செவ்வாய்க் கிழமை (ஆக. 3) பங்குச்சந்தை வணிகம் உயர்வுடன் நிறைவடைந்தது. சென்செக்ஸ் 800 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்தது. 

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 872.73 புள்ளிகள் உயர்ந்து 53,823.36 புள்ளிகளாக வர்த்தகம் நிறைவு பெற்றது. மொத்த வர்த்தகத்தில் இது 1.65 சதவிகிதம் உயர்வாகும்.

இதேபோன்று தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 245.60 புள்ளிகள் உயர்ந்து 16,130.75 புள்ளிகளாக வர்த்தகம் முடிவடைந்தது. மொத்த வர்த்தகத்தில் இது 1.55 சதவிகிதம் உயர்வாகும்.

சென்செக்ஸ் பட்டியலிலுள்ள முதல் 30 தர பங்குகளில் 27  நிறுவனங்களின் பங்குகள் உயர்வுடன் காணப்பட்டன.

இதில் அதிகபட்சமாக டைட்டன் கம்பெனி பங்குகள் 3.89 சதவிகிதமும், எச்.டி.எஃப்.சி. 3.72 சதவிகிதமும், இந்துஸ்இந்த் வங்கி 3.39 சதவிகிதமும், நெஸ்ட்லே இந்தியா 3.27 சதவிகிதமும் உயர்வுடன் காணப்பட்டன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம்! விவசாயிகளுக்கு மத்திய அரசு துரோகம் செய்கிறது - அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டு!

இது தெரியுமா? வெய்யிலில் இருந்து நிழலுக்கு வரும்போது கண்கள் இருட்டுவது ஏன்?

அண்ணாவின் அறிவுத் தீ பரவட்டும்!

விவசாயிகள் நலனில் சமரசம்! நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு!

ஊர்க்காவலன் (பாகம்-2)

SCROLL FOR NEXT