சோனி இந்தியாவுடன் இணைந்தது ’ஜீ' நிறுவனம்
பிரபல ஒளிபரப்பு நிறுவனமான ’ஜீ என்டர்டைன்மெண்ட்’ சோனி இந்தியாவுடன் அதிகாரப்பூர்வகாக இணைந்தது.
பிரபல ஒளிபரப்பு நிறுவனமான ’ஜீ என்டர்டைன்மெண்ட்’ சோனி இந்தியாவுடன் அதிகாரப்பூர்வகாக இணைந்தது.
கடந்த சில ஆண்டுகளாக ’ஜீ’ குழுமத் தயாரிப்பில் வெளிவந்த நிகழ்ச்சிகள் பெரிய அளவில் கவனிக்கப்படாததால் அந்நிறுவனம் கடும் வீழ்ச்சியைச் சந்தித்து வருகிறது. இதனால் பங்குச் சந்தையில் ‘ஜீல்’ எனப்படுகிற ’ஜீ’ பங்குகள் கணிசமாக குறையத் தொடங்கியது.
இதையும் படிக்க | குளிர்காலக் கூட்டத்தொடர் நிறைவு: கிரிப்டோகரன்சி தடையை அறிவிக்காத அரசு
Advertisement
Advertisement
இதனால் பங்குச்சந்தை சரிவையும் முதலீடுகளை அதிகரிக்கச் செய்யவும் சோனி இந்தியா நிறுவனத்துடன் கடந்த செப்டம்பர் மாதம் ரூ.11,625 கோடிக்கு ஒப்பந்தாமகியிருந்தது ஜீ நிறுவனம்.
தற்போது இரண்டு நிறுவனங்களும் அதிகாரப்பூர்வமாக இணைந்தாத அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. அதன் படி பங்குச்சந்தையில் தொலைக்காட்சி ஒளிபரப்பு , ஓடிடி தளம் ஆகியவைகளில் இக்கூட்டணி சேர்ந்து செயல்பட இருக்கிறது.
புதிய தயாரிப்புகளை மேற்கொள்வதற்காக ஜீ டிவியுடன் சோனி மேக்ஸும் , ஜீ 5 உடன் சோனி லைவ் ஓடிடி தளமும் இணைகிறது. இந்த புதிய கூட்டணிக்கு புனித் கோயங்கா தலைமைச் செயலராக செயல்பட இருக்கிறார்.
மேலும் இந்தியாவின் மிகப்பெரிய ஒளிபரப்பு நிறுவனமாக சோனி-ஜீ கூட்டணி உருவாகிறது. இனி லாபத்தில் 49.14 சதவீதம் ஜீ பங்குகளுக்கும் மீதம் இருக்கிற 50.86 சதவீதம் சோனி நிறுவனத்திற்கும் வழங்கப்பட இருக்கிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.