முகப்பு
வணிகம்

பங்குச்சந்தை வணிகம் சரிவுடன் தொடக்கம்

வர்த்தகத்தின் இரண்டாம் நாளான இன்று (நவ.16) பங்குச்சந்தை வணிகம் சரிவுடன் தொடங்கியது. சென்செக்ஸ் 150 புள்ளிகள் வரை சரிந்தது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:34 AM
பகிர்:


வர்த்தகத்தின் இரண்டாம் நாளான இன்று (நவ.16) பங்குச்சந்தை வணிகம் சரிவுடன் தொடங்கியது. சென்செக்ஸ் 150 புள்ளிகள் வரை சரிந்தது.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 150  புள்ளிகள் சரிந்து 60,517.06 புள்ளிகளாக வர்த்தகம் தொடங்கியது. மொத்த வர்த்தகத்தில் இது 0.31 சதவிகிதம் சரிவாகும்.

இதேபோன்று தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 45.35 புள்ளிகள் சரிந்து 18,064.80 புள்ளிகளாக வர்த்தகம் தொடங்கியது. மொத்த வர்த்தகத்தில் இது 0.22 சதவிகிதம் சரிவாகும்.

சென்செக்ஸ் பட்டியலிலுள்ள முதல் 30 தரப் பங்குகளில் 14 நிறுவனங்களின் பங்குகள் உயர்வுடன் நிறைவடைந்தது. ஏனைய நிறுவனங்களின் பங்குகள் சரிவுடன் காணப்பட்டன. 
 
அதிகபட்சமாக ரிலையன்ஸ் 1.65 சதவிகிதமும், ஏசியன் பெயின்ஸ் 1.13 சதவிகிதமும், எச்டிஎஃப்சி 1.01 சதவிகிதமும், கோட்டாக் வங்கி 1 சதவிகிதமும் குறைந்திருந்தன.  

முழு கட்டுரையைப் படிக்க →