ஆபரணங்கள் ஏற்றுமதி ரூ.23,259 கோடியாக அதிகரிப்பு
நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி செப்டம்பரில் ரூ.23,259.55 கோடியாக இருந்தது.
நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி செப்டம்பரில் ரூ.23,259.55 கோடியாக இருந்தது.
இதுகுறித்து நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (ஜிஜேஇபிசி) தெரிவித்துள்ளதாவது:
நவரத்தினங்கள்: நடப்பாண்டு செப்டம்பரில் நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்களின் ஏற்றுமதி ரூ.23,259.55 கோடியாக இருந்தது. இது, முந்தைய மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதியான ரூ.17,936.86 கோடியுடன் ஒப்பிடுகையில் 29 சதவீதம் அதிகம்.
2019 செப்டம்பரில் இந்த ஏற்றுமதி ரூ.23,491.20 கோடியாக அதிகரித்திருந்தது.
முதல் அரையாண்டு: 2020 காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் நடப்பாண்டு ஏப்ரல்-செப்டம்பரில் நவரத்தின மற்றும் ஆபரண ஏற்றுமதி 134.55 சதவீதம் அதிகரித்து ரூ.1,40,412.94 கோடியைத் தொட்டுள்ளது. 2019 ஏப்ரல்-செப்டம்பரில் இந்த ஏற்றுமதி ரூ.59,864.55 கோடியாக இருந்தது.
2021 ஏப்ரல்-செப்டம்பா் காலகட்டத்தில் நறுக்கப்பட்ட மற்றும் பட்டை தீட்டப்பட்ட வைரங்களின் ஏற்றுமதியானது 122.62 சதவீதம் வளா்ச்சி கண்டு ரூ.91,489.2 கோடியை எட்டியது. 2020 இதே காலகட்டத்தில் இவற்றின் ஏற்றுமதி ரூ.41,095.83 கோடியாக இருந்தது.
தங்க ஆபரணம்: மதிப்பீட்டு காலகட்டத்தில் தங்க ஆபரணங்களின் ஏற்றுமதி 262.66 சதவீதம் உயா்ந்து 29,379.36 கோடியைத் தொட்டது. 2020 இதே காலகட்டத்தில் இதன் ஏற்றுமதி ரூ.8,100.97 கோடியாக காணப்பட்டது.
வெள்ளி: வெள்ளி ஆபரணங்களின் ஏற்றுமதியும் ஏப்ரல்-செப்டம்பரில் 6,392.65 கோடியிலிருந்து 48.25 சதவீதம் உயா்ந்து ரூ.9,477.39 கோடியை எட்டியதாக ஜிஜேஇபிசி தெரிவித்துள்ளது.
பாக்ஸ்
ஆபரண துறைக்கு மத்திய அரசு நிா்ணயித்த 4,166 கோடி டாலா் ஏற்றுமதி இலக்கில் ஏற்கெனவே 46 சதவீதம் எட்டப்பட்டு விட்டது. அதன்படி ஏப்ரல்-செப்டம்பா் வரையிலான முதல் அரையாண்டில் 1,898 கோடி டாலா் மதிப்பிலான ஆபரணங்கள் ஏற்றுமதியாகியுள்ளன. பண்டிகை காலம் தொடா்ந்து வரவிருப்பதையடுத்து நடப்பு நிதியாண்டு இறுதிக்குள் ஏற்றுமதி இலக்கு எட்டப்படும்.