வணிகம்

பங்குச்சந்தை 2-வது நாளாக உயர்வுடன் நிறைவு: சென்செக்ஸ் 476 புள்ளிகள் ஏற்றம்

DIN

வாரத்தின் 3-வது வர்த்தக நாளான இன்று (செப்.15) வர்த்தக நேர முடிவில் பங்குச்சந்தை வணிகம் உயர்வுடன் முடிவடைந்தது. சென்செக்ஸ் 476 புள்ளிகளும், நிஃப்டி 139 புள்ளிகளும் உயர்ந்தன.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 476.11  புள்ளிகள் உயர்ந்து 58,723.20 புள்ளிகளாக வர்த்தகம் நிறைவு பெற்றது. மொத்த வர்த்தகத்தில் இது 0.82 சதவிகிதம் உயர்வாகும்.

இதேபோன்று தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 139.45 புள்ளிகள் உயர்ந்து 17,519.45 புள்ளிகளாக வர்த்தகம் முடிவடைந்தது. மொத்த வர்த்தகத்தில் இது 0.80 சதவிகிதம் உயர்வாகும்.

சென்செக்ஸ் பட்டியலிலுள்ள முதல் 30 தரப் பங்குகளில் 8 நிறுவனங்களின் பங்குகள் மட்டுமே சரிவைச் சந்தித்தன. எஞ்சிய 22 நிறுவனங்களின் பங்குகள் உயர்வுடன் காணப்பட்டன. 

அதிகபட்சமாக என்.டி.பி.சி. நிறுவனத்தின் பங்குகள் 7.16 சதவிகிதமும், பார்தி ஏர்டெல் 4.53 சதவிகிதமும், டைட்டன் கம்பெனி 3.09 சதவிகிதமும், எச்.டி.எல். டெக் 2.86 சதவிகிதமும் உயர்ந்திருந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவின் முதல் மல்யுத்த வீராங்கணை: சிறப்பித்த கூகுள்!

நெல்லை மாவட்ட காங். தலைவர் சடலமாக மீட்பு!

பிரேசிலில் கனமழைக்கு 70 பேர் மாயம்: 39 பேர் பலி!

கமர்ஷியல் கம்பேக் கொடுத்தாரா சுந்தர் சி?: அரண்மனை - 4 திரைவிமர்சனம்

விஜய் தேவரகொண்டாவின் 14வது படம் அறிவிப்பு!

SCROLL FOR NEXT