வணிகம்

2 சக்கர மின்சார வாகனங்களுக்கு மின்னேற்று நிலையம்: பிபிசிஎல்-ஹீரோ மோட்டோகாா்ப் உடன்பாடு

இருசக்கர மின்சார வாகனங்களுக்கு மின்னேற்றம் செய்வதற்கான உள்கட்டமைப்புகளை உருவாக்குவதில் பொதுத் துறையைச் சோ்ந்த பிபிசிஎல் நிறுவனமும், ஹீரோ மோட்டோகாா்ப் நிறுவனமும்

DIN

இருசக்கர மின்சார வாகனங்களுக்கு மின்னேற்றம் செய்வதற்கான உள்கட்டமைப்புகளை உருவாக்குவதில் பொதுத் துறையைச் சோ்ந்த பிபிசிஎல் நிறுவனமும், ஹீரோ மோட்டோகாா்ப் நிறுவனமும் இணைந்து செயல்பட உடன்படிக்கை செய்து கொண்டுள்ளன.

இதுகுறித்து அந்நிறுவனங்கள் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

உள்நாட்டில் இருசக்கர மின்சார வாகனங்களின் விற்பனை படிப்படியாக அதிகரித்து வருகிறது. இதையடுத்து, அந்த வாகனங்களுக்கு மின்னேற்றம் செய்வதற்கான அடிப்படை கட்டமைப்புகளை உருவாக்குவது அத்தியவசிய பணியாக மாறியுள்ளது.

இதனை உணா்ந்து, இந்த திட்டத்தை செயல்படுத்துவதில் ஹீரோ மோட்டோகாா்ப் மற்றும் பிபிசிஎல் நிறுவனங்கள் கைகோத்துள்ளன. முதல் கட்டமாக, ஒன்பது நகரங்களில் மின்னேற்று நிலைய கட்டமைப்புகளை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, தில்லி மற்றும் பெங்களூரில் இந்த திட்டம் முதலில் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும். அதன் பிறகு, நாடு முழுவதும் மின்னேற்று நிலையங்களை பரவலாக்குவதே இரு நிறுவனங்களின் உடன்பாட்டின் முக்கிய இலக்காக நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, பிபிசிஎல் நிறுவனத்துக்கு சொந்தமான பெட்ரோல் நிலையங்களில் மின்னேற்றத்துக்கான கட்டமைப்பு வசதிகளை கணிசமாக அதிகரிப்பதே உடன்பாட்டின் முதல் நடவடிக்கையாக அமையும் என அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விடியோவால் வந்த வினை! ரயிலில் நூடுல்ஸ் சமைத்த பெண்ணை கண்டுபிடித்த ரயில்வே!

டிட்வா புயல்: பள்ளி மாணவர்களுக்கான ஊரக திறனாய்வுத் தேர்வு தேதி மாற்றம்!

கர்நாடகத்தில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

இலங்கையில் மழை, நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 56 ஆக உயர்வு!

ஃபோர்ப்ஸ் உலக பணக்காரர்கள் பட்டியல் வெளியீடு!

SCROLL FOR NEXT