முகப்பு
வணிகம்

பங்குச் சந்தை எழுச்சி: சென்செக்ஸ் 61,000 புள்ளிகளைக் கடந்தது

வங்கிகள் மற்றும் ஐடி பங்குகளின் விலை உயர்வால் சென்செக்ஸ் 61,000 புள்ளிகளைக் கடந்து புதிய சாதனையைப் படைத்திருக்கிறது.

Updated On : 13 ஜனவரி, 2022 at 4:46 PM
பங்குச் சந்தை எழுச்சி: சென்செக்ஸ் 61,000 புள்ளிகளைக் கடந்தது
பகிர்:

வங்கிகள் மற்றும் ஐடி பங்குகளின் விலை உயர்வால் சென்செக்ஸ் 61,000 புள்ளிகளைக் கடந்து புதிய சாதனையைப் படைத்திருக்கிறது.

இந்த ஆண்டின் 2-வது வார பங்குச்சந்தை கடந்த திங்கள்கிழமையிலிருந்து சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி மதிப்புகள் உயர்வால் தொடர் ஏற்றத்தை அடைந்துள்ளது.

இந்நிலையில்,  நேற்று(ஜன.11) 60,616.89 புள்ளிகளில் நிறைவடைந்து இன்று 61,014.37 புள்ளிகளில் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 483.85 புள்ளிகள் அதிகரித்து 61,100.74 புள்ளிகளுடன் வர்த்தகமாகி வருகிறது.(காலை 10.45 மணி நிலவரம்)

Advertisement

18,055.75 புள்ளிகளில் நிறைவடைந்து இன்று 18,170.40 புள்ளிகளில் ஆரம்பமாகிய நிஃப்டி 131.25 புள்ளிகள் உயர்ந்து 18,187.50 புள்ளிகளில் வர்த்தகமாகிக் கொண்டிருக்கிறது.

தொடர்ந்து அதிகரித்து வரும் ஐடி மற்றும் வங்கிகளின் பங்குகள் தொடர்ந்து நிலையான ஏற்றத்தை தக்கவைத்திருக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.