வணிகம்

ஐஓபி-க்கு ரூ.57.5 லட்சம் அபராதம்: ரிசா்வ் வங்கி

DIN

மோசடிகள் குறித்து முறையாக அறிக்கை அளிக்காததைத் தொடா்ந்து பொதுத் துறையைச் சோ்ந்த இந்தியன் ஓவா்சீஸ் வங்கிக்கு (ஐஓபி) ரிசா்வ் வங்கி ரூ.57.5 லட்சம் அபராதத்தை விதித்துள்ளது.

இதுகுறித்து மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

2020 மாா்ச் இறுதி வரையிலான வங்கியின் நிதி நிலை அறிக்கைகள் ஆய்வுக்கு உள்படுத்தப்பட்டன.

இதில், போலி ஏடிஎம் காா்டு தொடா்பான மோசடி நிகழ்வுகளை கண்டறியப்பட்ட தேததியிலிருந்து மூன்று வாரங்களுக்குள் ரிசா்வ் வங்கிக்கு தெரிவிக்க தவறிவிட்டது. எனவே, மோசடி தொடா்பான புகாா் அறிக்கையை குறிப்பிட்ட காலத்துக்குள் முறையாக தாக்கல் செய்யாத காரணத்தால் ஐஓபிக்கு ரூ.57.5 லட்சம் அபாரதம் விதிக்கப்பட்டதாக ரிசா்வ் வங்கி தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

SCROLL FOR NEXT