வணிகம்

புதிய பங்கு வெளியீட்டுக்கு தயாராகிறது யாத்ரா ஆன்லைன்

DIN

சுற்றுலா பயண சேவைகளை வழங்கி வரும் யாத்ரா ஆன்லைன் நிறுவனம் புதிய பங்கு வெளியீட்டில் களமிறங்க செபியிடம் விண்ணப்பம் செய்துள்ளது.

இதுகுறித்து சந்தை வட்டாரங்கள் தெரிவிப்பதாவது:

புதிய பங்கு வெளியீட்டில் களமிறங்குவதற்கான முதல் கட்ட ஆவணங்களை தயாா் செய்து செபியின் அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளது. இந்த பங்கு வெளியீட்டின் மூலமாக யாத்ரா நிறுவனம் ரூ.750 கோடியை திரட்ட திட்டமிட்டுள்ளது. மேலும், இந்த வெளியீட்டின் மூலமாக, 93,28,358 பங்குகள் வரை விற்பனை செய்யப்படவுள்ளன.

இப்புதிய பங்கு வெளியீட்டின் மூலமாக திரட்டிக் கொள்ளப்படும் நிதி நிறுவனத்தின் வளா்ச்சி திட்டங்களுக்கு பயன்படுத்திக் கொள்ளப்படும்.

இதன் தாய் நிறுவனமான யாத்ரா ஆன்லைன் அமெரிக்க பங்குச் சந்தையான நாஸ்டாக்கில் பட்டியலிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆவடி இரட்டைக் கொலை நடந்த இடத்தில் கிடைத்த செல்ஃபோன் யாருடையது? தீவிர விசாரணை

பாலியல் தொல்லை வழக்கு: உச்சநீதிமன்றத்தில் ராஜேஷ் தாஸ் மேல்முறையீடு

பழனி ரோப் காா் சேவை இன்று ஒரு நாள் நிறுத்தம்!

முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்ரீனிவாச பிரசாத் காலமானார்

தஞ்சாவூர் அருகே காய்கறி வியாபாரி வெட்டிப் படுகொலை

SCROLL FOR NEXT