முகப்பு
வணிகம்

ரெப்போ வட்டி விகிதம் அதிகரிப்பு: தனிநபர், வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதம் உயர்கிறது

வங்கிகளுக்கு ஆர்பிஐ தரும் குறுகியகால கடன்களுக்கான வட்டி(ரெப்போ) விகிதத்தை உயர்த்துவதாக ஆர்பிஐ அறிவித்துள்ளது.

Updated On : 4 மே 2022, 2:59 pm IST
ஆா்பிஐ ஆளுநர் சக்திகாந்த தாஸ்
பகிர்:

வங்கிகளுக்கு ஆர்பிஐ தரும் குறுகியகால கடன்களுக்கான வட்டி(ரெப்போ) விகிதத்தை உயர்த்துவதாக ஆர்பிஐ அறிவித்துள்ளது.

உக்ரைன் - ரஷியா போரால் உலகப் பொருளாதாரம் மீட்சி அடையாமல் பாதித்து வருவதால் ரெப்போ வட்டி விகிதத்தை 4 சதவீதத்திலிருந்து 4.40 சதவீதமாக  அதிகரிப்பதாக மத்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக தனிநபர், வாகன, வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதமும் உயர உள்ளது.

Advertisement

முன்னதாக, கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என்றும் அதனால் வீடு மற்றும் வாகனங்களுக்கான வட்டி விகிதத்திலும் மாற்றம் இருக்காது என மத்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.