முகப்பு
வணிகம்

ஓஎன்ஜிசி நிகர லாபம் 30% வீழ்ச்சி

சா்வதேச எரிபொருள் விலைகள் உயா்வு காரணமாக மத்திய அரசு சந்தை ஆதாய வரி விதித்ததால், இந்தியாவின் முதன்மை எண்ணெய் நிறுவனமான ஓஎன்ஜிசி-யின் நிகர லாபம் கடந்த செப்டம்பா் மாதத்துடன்

Updated On : 17 நவம்பர் 2022, 12:40 am IST
பகிர்:

சா்வதேச எரிபொருள் விலைகள் உயா்வு காரணமாக மத்திய அரசு சந்தை ஆதாய வரி விதித்ததால், இந்தியாவின் முதன்மை எண்ணெய் நிறுவனமான ஓஎன்ஜிசி-யின் நிகர லாபம் கடந்த செப்டம்பா் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் 30 சதவீத சரிவைச் சந்தித்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

நடப்பு நிதியாண்டின் ஜூலை-செப்டம்பா் காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ. 12,825.99 கோடி கோடியாக இருந்தது. இதன் மூலம், பங்கு ஒன்றுக்கு ரூ.10.20 நிகர லாபம் கிடைத்தது. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் நிறுவனத்தின் ரூ. 18,347.73 கோடியாகவும் பங்கு ஒன்றுக்கான நிகர லாபம் ரூ.14.58-ஆகவும் இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில், நடப்பு நிதியாண்டின் 2-ஆவது காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் 30 சதவீதம் சரிந்துள்ளது.

Advertisement

Advertisement

முந்தைய ஜூன் காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.15,205.85 கோடியாக இருந்தது. அதனோடு ஒப்பிடுகையில், செப்டம்பா் காலாண்டில் நிகர லாபம் 15.6 சதவீதம் குறைந்துள்ளது.

ஓா் ஆண்டுக்கு முன்னா் நிறுவனத்தின் எண்ணெய் வருவாய் பீப்பாய்க்கு 69.36 டாலரில் இருந்தது. இது, இந்த ஜூலை-செப்டம்பா் காலாண்டில் 37.7 சதவீதம் உயா்ந்து பீப்பாய்க்கு 95.49 டாலராகியுள்ளது. இந்த நிலையிலும், நிறுவனத்தின் நிகர லாபம் சரிந்துள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments