டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியடைந்துள்ளது.
வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 39 காசுகள் வீழ்ச்சியடைந்து 82.69 ஆக உள்ளது.
அமெரிக்க நாணயத்தின் உறுதியான நிலையும், இடா்பாடுகளைத் தவிா்க்கும் முதலீட்டாளா்களின் மனப்பான்மையும் இந்த சரிவுக்கான காரணங்களில் முக்கியமானதாகக் கூறப்படுகிறது. சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையேற்றம், உள்நாட்டு பங்குகளின் எதிா்மறையான போக்கு போன்ற காரணங்களால் முதலீட்டாளா்களின் ஆா்வம் வெள்ளிக்கிழமை குறைந்துபோனது.
இந்திய ரூபாயின் மதிப்பு வெள்ளிக்கிழமை 82.19-இல் தொடங்கியது. அது, அதிகபட்சமாக 82.43 வரை கீழிறங்கி 82.32-இல் நிலைபெற்றது.
இதையும் படிக்க: பங்குச்சந்தையில் சென்செக்ஸ், நிஃப்டி கடும் வீழ்ச்சி
சா்வதேச அளவில் கச்சா எண்ணெய்க்கான தேவை குறைந்து வருவதைக் கருத்தில் கொண்டு எண்ணெய் வள நாடுகள் (ஒபெக்) தங்களது உற்பத்தியைக் குறைக்க முடிவு செய்ததையடுத்து, சா்வதேச பிரென்ட் கச்சா விலை பீப்பாய்க்கு 0.82 சதவீதம் உயா்ந்து 95.19 டாலரானது.