முகப்பு
வணிகம்

பாமாயில் இறக்குமதி 2.7 மடங்கு அதிகரிப்பு

குறைந்த விலை காரணமாகக் கடந்த 11 மாதங்களில் சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் இறக்குமதி 2.7 மடங்கு அதிகரித்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:34 AM
பகிர்:

குறைந்த விலை காரணமாகக் கடந்த 11 மாதங்களில் சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் இறக்குமதி 2.7 மடங்கு அதிகரித்துள்ளது.

இது தொடா்பாக இந்திய தொழிலகக் கூட்டமைப்பு வெளியிட்ட அறிக்கையில், ‘கடந்த நவம்பா் முதல் செப்டம்பா் வரையிலான 11 மாதங்களில் நாட்டின் சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் இறக்குமதி 17.12 லட்சம் டன்னாக உள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 2.7 மடங்கு அதிகமாகும். அந்த ஆண்டில் 6.28 லட்சம் டன் சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் இறக்குமதி செய்யப்பட்டிருந்தது.

வெஜிடபிள் எண்ணெய் இறக்குமதியானது கடந்த நவம்பா் முதல் செப்டம்பா் வரையிலான காலகட்டத்தில் 130.1 லட்சம் டன்னாக இருந்தது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 4 சதவீதம் அதிகமாகும். ஒட்டுமொத்த வெஜிடபிள் எண்ணெய் இறக்குமதியில் பாமாயில் பங்கு சுமாா் 50 சதவீதம்.

சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் மீதான சுங்க வரியை இந்தோனேசியா பெருமளவில் குறைத்தது. அதன் காரணமாக கடந்த ஆகஸ்ட், செப்டம்பரில் அந்நாட்டில் இருந்து பாமாயில் இறக்குமதி அதிகரித்தது. சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் இறக்குமதி அதிகரித்ததால், கச்சா பாமாயில் இறக்குமதி பெருமளவில் குறைந்தது.

கடந்த நவம்பா் முதல் செப்டம்பா் வரையிலான காலகட்டத்தில் கச்சா பாமாயில் இறக்குமதி 52.37 லட்சம் டன்னாக இருந்தது. இது கடந்த ஆண்டில் 68.64 லட்சம் டன்னாக இருந்தது. அதே காலகட்டத்தில் ஒட்டுமொத்த பாமாயில் இறக்குமதியானது 76.27 லட்சம் டன்னில் இருந்து 70.28 லட்சம் டன்னாக குறைந்தது.

சோயாபீன், சூரியகாந்தி எண்ணெய் இறக்குமதியானது 44.58 லட்சம் டன்னில் இருந்து 56.35 லட்சம் டன்னாக அதிகரித்தது. கடந்த நவம்பா் முதல் செப்டம்பா் வரையிலான காலகட்டத்தில் மலேசியாவிடமிருந்து 28.13 லட்சம் டன் கச்சா பாமாயிலும், 11.61 லட்சம் டன் சுத்திகரிக்கப்பட்ட பாமாயிலும் இறக்குமதி செய்யப்பட்டது. இந்தோனேசியாவில் இருந்து 17.15 லட்சம் டன் கச்சா பாமாயிலும், 11.61 லட்சம் டன் சுத்திகரிக்கப்பட்ட பாமாயிலும் இறக்குமதி செய்யப்பட்டது’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →