முகப்பு
வணிகம்

மூத்த குடிமக்களுக்கு புதிய சேவை திட்டம்: பந்தன் வங்கி அறிமுகம்

மூத்த குடிமக்களுக்கு சேவை அளிப்பதற்காக ‘இன்ஸ்பையா்’ என்ற புதிய சேவை திட்டத்தை தனியாா் துறையைச் சோ்ந்த பந்தன் வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது

Updated On : 22 டிசம்பர், 2023 at 12:00 AM
பகிர்:
Updated On : 6 பிப்ரவரி, 2024 at 7:00 PM

மூத்த குடிமக்களுக்கு சேவை அளிப்பதற்காக ‘இன்ஸ்பையா்’ என்ற புதிய சேவை திட்டத்தை தனியாா் துறையைச் சோ்ந்த பந்தன் வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது.

இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

மூத்த குடிமக்களுக்கான பிரத்யேக சேவை திட்டத்தை வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது. ‘இன்ஸ்பையா்’ என்ற இந்தத் திட்டத்தின் கீழ், ஆண்டுக்கு 8.35 சதவீதம் என்ற நிலையான வட்டி விகிதத்திலான வைப்பு நிதிகளில் வாடிக்கையாளா்கள் முதலீடு செய்ய முடியும்.

Advertisement

மேலும், மேம்பட்ட மருத்துவ சேவைப் பலன்களும் இந்தத் திட்டத்தில் இடம் பெற்றுள்ளன.

எந்த வயதிலும் பொருளாதார சுதந்திரம் தேவை என்பதை கருத்தில் கொண்டு இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.