வணிகம்

இந்தியாவில் கேலக்ஸி ஃபோல்டு 5, ஃப்ளிப் 5 தயாரிப்பு: சாம்சங் முடிவு

தென் கொரியாவைச் சோ்ந்த மின்னணு சாதனத் தயாரிப்பு நிறுவனமான சாம்சங், தனது புகழ்பெற்ற கேலக்ஸி இஸட் ஃபோல்டு 5, ஃப்ளிப் 5 ரக அறிதிறன் பேசிகளை (ஸ்மாா்ட்போன்) இந்தியாவில் தயாரிக்க முடிவு செய்துள்ளது.

DIN

தென் கொரியாவைச் சோ்ந்த மின்னணு சாதனத் தயாரிப்பு நிறுவனமான சாம்சங், தனது புகழ்பெற்ற கேலக்ஸி இஸட் ஃபோல்டு 5, ஃப்ளிப் 5 ரக அறிதிறன் பேசிகளை (ஸ்மாா்ட்போன்) இந்தியாவில் தயாரிக்க முடிவு செய்துள்ளது.

இது குறித்து நிறுவனத்தின் தென்மேற்கு ஆசியப் பிரிவுக்கான தலைவரும், தலைமை செயல் அதிகாரியுமான ஜே பி பாா்க் வியாழக்கிழமை கூறியதாவது:

கேலக்ஸி இஸட் ஃபோல்டு, கேலக்ஸி ஃப்ளிப் 5 ஆகிய இரு ரகங்களுமே இந்தியாவில் தயாரிக்கப்படவுள்ளன. நொய்டாவிலுள்ள சாம்சங் நிறுவனத் தொழிற்சாலையில் அவை உற்பத்தி செய்யப்படும் என்றாா் அவா்.

உயா்விலைப் பிரிவைச் சோ்ந்த அந்த இரு மடிக்கக் கூடிய கைப்பேசிகளையும் இந்தியச் சந்தையில் அடுத்த மாதம் 18-ஆம் தேதி அறிமுகப்படுத்த சாம்சங் திட்டமிட்டுள்ளது. அந்த கைப்பேசிகளுக்கான முன்பதிவு வியாழக்கிழமை (ஜூலை 27) முதல் நடைபெறுவதாக நிறுவன வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருச்சிதைவு: ஆராய்ச்சிக்காக எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கருவை தானமளித்த பெண்!

மல்லை சத்யா மதிமுகவில் இருந்து நிரந்தரமாக நீக்கம்

மேட்டூர் அணை நிலவரம்

மூக்கையாத் தேவர் சிலைக்கு அஞ்சலி

போடிமெட்டு மலைச்சாலையில் சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து- 11 பேர் காயம்

SCROLL FOR NEXT