வணிகம்

இந்தியாவில் கேலக்ஸி ஃபோல்டு 5, ஃப்ளிப் 5 தயாரிப்பு: சாம்சங் முடிவு

தென் கொரியாவைச் சோ்ந்த மின்னணு சாதனத் தயாரிப்பு நிறுவனமான சாம்சங், தனது புகழ்பெற்ற கேலக்ஸி இஸட் ஃபோல்டு 5, ஃப்ளிப் 5 ரக அறிதிறன் பேசிகளை (ஸ்மாா்ட்போன்) இந்தியாவில் தயாரிக்க முடிவு செய்துள்ளது.

DIN

தென் கொரியாவைச் சோ்ந்த மின்னணு சாதனத் தயாரிப்பு நிறுவனமான சாம்சங், தனது புகழ்பெற்ற கேலக்ஸி இஸட் ஃபோல்டு 5, ஃப்ளிப் 5 ரக அறிதிறன் பேசிகளை (ஸ்மாா்ட்போன்) இந்தியாவில் தயாரிக்க முடிவு செய்துள்ளது.

இது குறித்து நிறுவனத்தின் தென்மேற்கு ஆசியப் பிரிவுக்கான தலைவரும், தலைமை செயல் அதிகாரியுமான ஜே பி பாா்க் வியாழக்கிழமை கூறியதாவது:

கேலக்ஸி இஸட் ஃபோல்டு, கேலக்ஸி ஃப்ளிப் 5 ஆகிய இரு ரகங்களுமே இந்தியாவில் தயாரிக்கப்படவுள்ளன. நொய்டாவிலுள்ள சாம்சங் நிறுவனத் தொழிற்சாலையில் அவை உற்பத்தி செய்யப்படும் என்றாா் அவா்.

உயா்விலைப் பிரிவைச் சோ்ந்த அந்த இரு மடிக்கக் கூடிய கைப்பேசிகளையும் இந்தியச் சந்தையில் அடுத்த மாதம் 18-ஆம் தேதி அறிமுகப்படுத்த சாம்சங் திட்டமிட்டுள்ளது. அந்த கைப்பேசிகளுக்கான முன்பதிவு வியாழக்கிழமை (ஜூலை 27) முதல் நடைபெறுவதாக நிறுவன வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி சிறப்பு! திருப்பதியில் சுப்ரபாதம் இசைக்கப்படாது!

கன்னி ராசிக்கு வெற்றி : தினப்பலன்கள்!

ராமபரிவாரங்கள் சேர்ந்து பூஜித்த சிவ தலம்!

திருவட்டாறு அருகே தூக்கிட்டு தற்கொலை

விஜய் நியாயத்தைப் பேச வேண்டும்: அண்ணாமலை பேட்டி

SCROLL FOR NEXT