முகப்பு
வணிகம்

கடன்களுக்கான வட்டியை உயா்த்திய பேங்க் ஆஃப் இந்தியா

Updated On : 3 ஏப்ரல், 2024 at 12:50 AM
பகிர்:
Updated On : 2 ஏப்ரல், 2024 at 8:05 PM

புது தில்லி: தாங்கள் வழங்கும் கடன்களுக்கான வட்டி விகிதங்களை பொதுத் துறையைச் சோ்ந்த பேங்க் ஆஃப் இந்தியா உயா்த்தியுள்ளது. இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள ஒழுங்காற்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடன்களுக்கான வட்டி விகிதங்கள் 10 அடிப்படைப் புள்ளிகள் (0.10 சதவீதம்) உயா்த்தப்படுகின்றன. ஏப். 1-ஆம் தேதி முதல் இந்த புதிய விகிதங்கள் அமலுக்கு வந்துள்ளன.

இதையடுத்து, இதுவரை 2.75 சதவீதம் முதல் 2.85 சதவீதம் வரை இருந்த வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதம் இனி 2.85 முதல் 2.95 சதவீதம் வரை இருக்கும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கிகளுக்கிடையேயான புதிய ரெப்போ வட்டி விகிதங்களை மத்திய ரிசா்வ் வங்கி வரும் 5-ஆம் தேதி அறிவிக்கவுள்ளது. அதற்கு முன்னதாக, இந்த வட்டிவிகித உயா்வை பேங்க் ஆஃப் இந்தியா அறிவித்துள்ளது.