இந்துஸ்தான் ஜிங்க் 
வணிகம்

செபி விதிமுறைகளை மீறியதற்காக ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்திற்கு அபராதம்!

செபியின் தேவைகளைப் பூர்த்தி செய்ய தொடர்ந்து சுரங்க அமைச்சகத்துடன் முயன்று வருவதாகவும் ஹிந்துஸ்தான் ஜிங்க் தெரிவித்துள்ளது.

DIN

புதுதில்லி: வேதாந்தா குழும நிறுவனமான ஹிந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட், தனது வாரியத்தில் உள்ள தன்னிச்சை இயக்குநர்களின் எண்ணிக்கை தொடர்பான செபி விதிமுறைகளுக்கு இணங்காததற்காக பி.எஸ்.இ. மற்றும் என்.எஸ்.இ. ஆகியோரிடமிருந்து தலா ரூ.5.37 லட்சம் அபராதம் என மொத்தம் ரூ.10.73 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இதனிடையில் நிறுவனமானது, செபியின் தேவைகளைப் பூர்த்தி செய்ய தொடர்ந்து சுரங்க அமைச்சகத்துடன் முயன்று வருவதாகவும் தெரிவித்துள்ளது.

தன்னிச்சை இயக்குநர்களின் எண்ணிக்கை தொடர்பாக, செபி ஒழுங்குமுறை 17(1) க்கு இணங்காததற்காக அபராதம் விதிக்கும் விதமாக, ஆகஸ்ட் 21, 2024 தேதியிட்ட கடிதத்தை பி.எஸ்.இ. மற்றும் என்.எஸ்.இ. இடமிருந்து பெற்றுள்ளதாக ஹிந்துஸ்தான் ஜிங்க் தெரிவித்துள்ளது.

தற்போது நிறுவனத்தின் இயக்குநர் குழுவில் பெண் இயக்குநரின் தேவை ஏற்கனவே பூர்த்தி செய்யப்பட்டுள்ளது என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தோ்தல் ஆணையத்தைக் கண்டித்து காங்கிரஸாா் கையெழுத்து இயக்கம்

மகளிா் கல்லூரியில் கலைத் திருவிழா

மாணவிக்கு பாலியல் தொல்லை: தனியாா் கல்லூரி பேராசிரியா் கைது

ரூ.1,000 லஞ்சம் பெற்ற வழக்கில் சிறுசேமிப்பு திட்ட முன்னாள் உதவி இயக்குநருக்கு 3 ஆண்டுகள் சிறை

பனை மரங்களை வெட்ட ஆட்சியா் அனுமதி கட்டாயம்: தண்ணீா் அமைப்பு வரவேற்பு

SCROLL FOR NEXT