முகப்பு
வணிகம்

செபி விதிமுறைகளை மீறியதற்காக ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்திற்கு அபராதம்!

செபியின் தேவைகளைப் பூர்த்தி செய்ய தொடர்ந்து சுரங்க அமைச்சகத்துடன் முயன்று வருவதாகவும் ஹிந்துஸ்தான் ஜிங்க் தெரிவித்துள்ளது.

Updated On : 22 ஆகஸ்ட் 2024, 7:42 pm IST
இந்துஸ்தான் ஜிங்க்
பகிர்:

புதுதில்லி: வேதாந்தா குழும நிறுவனமான ஹிந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட், தனது வாரியத்தில் உள்ள தன்னிச்சை இயக்குநர்களின் எண்ணிக்கை தொடர்பான செபி விதிமுறைகளுக்கு இணங்காததற்காக பி.எஸ்.இ. மற்றும் என்.எஸ்.இ. ஆகியோரிடமிருந்து தலா ரூ.5.37 லட்சம் அபராதம் என மொத்தம் ரூ.10.73 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இதனிடையில் நிறுவனமானது, செபியின் தேவைகளைப் பூர்த்தி செய்ய தொடர்ந்து சுரங்க அமைச்சகத்துடன் முயன்று வருவதாகவும் தெரிவித்துள்ளது.

தன்னிச்சை இயக்குநர்களின் எண்ணிக்கை தொடர்பாக, செபி ஒழுங்குமுறை 17(1) க்கு இணங்காததற்காக அபராதம் விதிக்கும் விதமாக, ஆகஸ்ட் 21, 2024 தேதியிட்ட கடிதத்தை பி.எஸ்.இ. மற்றும் என்.எஸ்.இ. இடமிருந்து பெற்றுள்ளதாக ஹிந்துஸ்தான் ஜிங்க் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

தற்போது நிறுவனத்தின் இயக்குநர் குழுவில் பெண் இயக்குநரின் தேவை ஏற்கனவே பூர்த்தி செய்யப்பட்டுள்ளது என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments