FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வணிகம்

ரூ.5,000 கோடி திரட்டிய பரோடா வங்கி

பொதுத் துறையைச் சோ்ந்த பரோடா வங்கி உள்கட்டமைப்பு கடன் பத்திரங்களை வெளியிட்டு ரூ.5,000 கோடி திரட்டியுள்ளது.

Updated On : 30 ஆகஸ்ட் 2024, 2:23 am IST
பகிர்:

பொதுத் துறையைச் சோ்ந்த பரோடா வங்கி உள்கட்டமைப்பு கடன் பத்திரங்களை வெளியிட்டு ரூ.5,000 கோடி திரட்டியுள்ளது.

இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

நீண்டகால உள்கட்டமைப்பு கடன் பத்திர வெளியீடு மூலம் ரூ.5,000 கோடி மூலதனம் திரட்டப்பட்டுள்ளது. பத்து ஆண்டுகள் பருவகாலம் கொண்ட அந்தப் பத்திரங்களுக்கு 7.30 சதவீத ஈவுத் தொகை நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

தொடக்கத்தில் ரூ.2,000 கோடிக்கு கடன் பத்திரங்கள் வெளியிடப்பட்டன. ஆனால், ரூ.15,000 கோடிக்கும் மேல் கடன் பத்திரங்களைக் கோரி 146 விண்ணப்பங்கள் குவிந்தன. அதையடுத்து ரூ.5,000 கோடி மதிப்பிலான கடன் பத்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments