வணிகம்

இந்தியாவிலிருந்து 8,000 கோடி டாலருக்கு ஏற்றுமதி: அமேஸான் இலக்கு

இந்தியாவிலிருந்து ரூ.8,000 கோடி டாலர் (சுமார் ரூ.6.79 லட்சம் கோடி) மதிப்பிலான பொருள்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முன்னணி இணையவழி வர்த்தக நிறுவனமான அமேஸான் இலக்கு நிர்ணயித்துள்ளது.

DIN

இந்தியாவிலிருந்து ரூ.8,000 கோடி டாலர் (சுமார் ரூ.6.79 லட்சம் கோடி) மதிப்பிலான பொருள்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முன்னணி இணையவழி வர்த்தக நிறுவனமான அமேஸான் இலக்கு நிர்ணயித்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவிலிருந்து ஒட்டுமொத்தமாக 8,000 கோடி டாலர் மதிப்பிலான பொருள்களை ஏற்றுமதி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவை நிறுவனத்தின் ஏற்றுமதி மையமாக மாற்றும் நோக்கத்தின் ஒரு பகுதியாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நாட்டிலிருந்து பொருள்கள் ஏற்றுமதி செய்யப்படுவதை அதிகரிக்கும் எங்களது முயற்சிக்கு நல்ல பலன் கிடைத்ததையடுத்து ஏற்கெனவே நிர்ணயிக்கபட்டிருந்த ஏற்றுமதி இலக்கை நான்கு மடங்காக்கியுள்ளோம் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக, வரும் 2025-ஆம் ஆண்டுக்குள் 2,000 கோடி டாலர் (சுமார் 1.7 லட்சம் கோடி) மதிப்பிலான பொருள்களை ஏற்றுமதி செய்ய நிறுவனம் இலக்கு நிர்ணயித்திருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வங்கதேசம்: ஹிந்து இளைஞா் கொலையில் 7 போ் கைது

டாஸ்மாக் பணியாளா் பிரச்னைக்கு தீா்வு காண முதல்வா் பேச்சு நடத்த வேண்டும்: கு.பாலசுப்ரமணியன்

ஹிஸ்புல் முஜாஹிதீன் தலைவருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர இயலாத கைது ஆணை!

பல் மருத்துவப் படிப்பில் நீட் தகுதியை குறைக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை: உச்சநீதிமன்றம்

நாகையில் பாய்மரப் படகு பயிற்சி மையம்: உதயநிதி தொடங்கிவைத்தாா்

SCROLL FOR NEXT