முகப்பு
வணிகம்

தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தையை தொடங்க இங்கிலாந்து விரும்பம்!

தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்துக்கான பேச்சுவார்த்தையை, அடுத்த ஆண்டு ஜனவரியில், மீண்டும் துவங்க, இங்கிலாந்து பரிந்துரைத்துள்ளது என மத்திய வர்த்தக துறை செயலர், சுனில் பர்த்வால் தெரிவித்தார்.

Updated On : 16 டிசம்பர் 2024, 9:47 pm IST
India-UK Free Trade Agreement
பகிர்:

புதுதில்லி: தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்துக்கான பேச்சுவார்த்தையை, அடுத்த ஆண்டு ஜனவரியில், மீண்டும் துவங்க, இங்கிலாந்து பரிந்துரைத்துள்ளது என மத்திய வர்த்தக துறை செயலர், சுனில் பர்த்வால் தெரிவித்தார்.

முன்மொழியப்பட்ட தடையற்ற வர்த்தக உடன்படிக்கைக்கான பேச்சுவார்த்தைகள் 2022 ஜனவரியில் தொடங்கியது. அப்போது இரு நாடுகளும் பொதுத் தேர்தலில் வந்ததால், 14 வது சுற்று பேச்சுவார்த்தை முடங்கியது.

அதே வேளையில், 2025ஆம் ஆண்டு தொடக்கத்தில் தடையற்ற வர்த்தக உடன்படிக்கை குறித்த பேச்சுவார்த்தைகளுக்கான தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

இதையும் படிக்க: ராஜஸ்தானில் ரூ.10,000 கோடி முதலீடு செய்யும் ஒரியானா பவர்!

மறுபுறம் ஸ்காட்ச் விஸ்கி, மின்சார வாகனங்கள், ஆட்டு இறைச்சி, சாக்லேட்டுகள் மற்றும் சில மிட்டாய் பொருட்கள் ஆகிய பொருட்களின் இறக்குமதி வரிகளை கணிசமாகக் குறைக்க இங்கிலாந்து முயன்றும் வருகிறது.

இந்தியாவில் தொலைத்தொடர்பு, சட்டம் மற்றும் நிதி சேவைகளான வங்கி மற்றும் காப்பீடு ஆகிய பிரிவுகளில் சேவையை வழங்கவும் விருப்ம் தெரிவித்தும் வருகிறது.

இந்தியாவிற்கும் இங்கிலாந்திற்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகம் 2022-23ல் 20.36 பில்லியனிலிருந்து 2023-24ல் 21.34 பில்லியன் அமெரிக்க டாலர்களாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments