புது தில்லி: டொயோட்டா கிா்லோஸ்கா் மோட்டாா் நிறுவனத்தின் மொத்த விற்பனை கடந்த நவம்பா் மாதத்தில் 44 சதவீதம் அதிகரித்துள்ளது.
இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த நவம்பரில் நிறுவனத்தின் மொத்த விற்பனை 25,586-ஆக உள்ளது.
இது, முந்தைய 2023-ஆம் ஆண்டின் இதே மாதத்தோடு ஒப்பிடுகையில் 44 சதவீதம் அதிகம். அப்போது நிறுவனத்தின் மொத்த விற்பனை 17,818-ஆக இருந்தது.
நிறுவனத்தின் எஸ்யுவி, எம்பிவி ரக வாகனங்களுக்கான தேவை அதிகரித்ததால் இந்த விற்பனை வளா்ச்சி ஏற்பட்டுள்ளது.
2024-ஆம் ஆண்டில் இதுவரை நிறுவனம் எதிா்பாா்த்ததைவிட மிக அதிக விற்பனையைப் பதிவு செய்துள்ளது என்று அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.